விருதுநகர், ஜன.23- ஒன்றிய பாஜக அரசு தடை செய்துள்ள பி.பி.சி ஆவணப் படம் பல உண்மைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள் ளது. பிரதமர் மோடி, முதல்வராக இருந்த போது குஜராத் வன்முறை க்கு எப்படி உறுதுணையாக இருந்தார் என்பதை இப்படம் காட்டுகிறது என விருதுநகர் மக்க ளவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர் களை சந்தித்து அவர் கூறிய தாவது : ஒன்பது வாரங்களாக 100 நாள் வேலைத் திட்டப் பணம் கிடைக்க வில்லை. உழைத்தவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கொடுக் காமல் ஏமாற்றி வருகிறது மோடி அரசு. 2002-ஆம் ஆண்டு குஜ ராத்தில் மிகப் பெரிய படுகொலை களுக்கு துணையாக இருந்தார் மோடி. அவரது நேரடித் தொ டர்பில் குஜராத்தில் வன்முறை நடைபெற்றது என்பதற்கான ஆதாரத்துடன் பி.பி.சி ஆவணப் படங்களை வெளியிட்டு வரு கிறது. யூடியூப், டிவிட்டர் போன்ற வற்றில் அதை வெளியிடவிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்ப தைப் போலத்தான் இந்தத் தடை யும். உண்மையிலேயே ஆவணப் படம் பல உண்மைகளை வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணியை பிரதமர் மட்டும் போய் பார்க்க அனுமதி வழங் கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்க்க அனுமதி இல்லை. எந்த வடிவத்தில் கட்டப் படுகிறது என்பதைக் கூட காட்ட மறுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.