தில்லியில் மக்களின் கண்முன்பே 16 வயது சிறுமி கொடூரக் கொலை!
தில்லியின் ஷாபாத் டெய்ரி என்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சாக்ஷி என்ற 16 வயது சிறுமி 20 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டும், தலையில் பலமுறை கல்லைப் போட்டு நசுக்கி யும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமியுடன் பழகி வந்தவராக கூறப்படும் சாஹில் (20) என்பவரை காவல்துறையினர் புலந்த்ஷஹர் பகுதியில் கைது செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, மக்கள் கூட்டத்தின் முன்பாகவே, இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், குற்றவாளியை யாரும் தடுக்கவோ, தடுக்க முயற்சிக்கவோ இல்லை. தலைநகர் தில்லி பெண் களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவருகிறது என்ற கூறப்படும் நிலையில், அதனை உண்மை யாக்கும் வகையில் மேலும் ஒரு கொடூரம் அரங்கேறியிருக்கிறது. தில்லி காவல்துறை ஒன்றிய அரசின் உள்துறைக் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பள்ளிகளில் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுப்பு?
தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங் கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள தருவாயில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றன. ஆனால் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கப்படாது என்ற நிர்வா கங்களின் அறிவிப்பால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு செல்லாதது நல்லதாக போனது
“நான் காலையில் நிகழ்வை பார்த்தேன். நான் அங்கு செல்லாததில் மகிழ்ச்சி அடை கிறேன். அங்கு நடந்தவற்றை பார்த்து நான் கவலைப்பட்டேன். நவீன அறிவியலின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பண்டிட் நேருவின் கருத்துக்கு நேர்மாறாக அங்கு நடந்தது. நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதாக இருந்தது. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரை அழைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. மக்க ளவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். ஆனால், குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அங்கு இல்லை. எனவே முழு நிகழ்வும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது போல் தெரிகிறது” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியுள்ளார்.
அம்பேத்கரிய சிந்தனைகளின்படி நாடாளுமன்றம் செயல்பட வேண்டும்
“புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டிருப்பதற்கு நான் ஒன்றிய அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கி றேன். அம்பேத்கரின் மனிதாபிமான சிந்தனைகள் அடிப்படையிலும், அவர் உருவாக்கிய புனிதமான அரசமைப்பு சட்டத்தின் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும் நாடு, நாட்டு மக்கள் நலன் கருதி புதிய நாடாளுமன்றம் செயல்பட வேண்டும். அதுவே பொருத்தமானதாகவும் இருக்கும்” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். முன்னதாக, புதிய நாடாளு மன்றத் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது என்று கூறியிருந்த மாயா வதி, அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த போதும், பிற பணிகளை காரணமாக கூறி அவரும் நாடா ளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
வெற்றியாளர்கள் நீதிகேட்டால் வில்லன்களாகி விடுவார்களா?
“ஒன்றிய உள்துறை அமைச்சகம்தான் வீரர்கள் மீது இந்த அத்துமீறலை மேற்கொள்ள அனு மதி வழங்கியதா? என்பதற்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்படி இழிவாக நடத்தப்படுவதைக் கண்டு நான் மிக வும் வருத்தம் அடைந்துள்ளேன். விளையாட்டுகளின் மூலம் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் நீதிக்காக இதுபோன்ற போராட்டங்களை நடத்த நிர்ப்பந்திக்கப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. அனைவராலும் பாராட்டப்பட்ட வெற்றியாளர்கள் திடீ ரென தங்களுக்கு நீதி கேட்கும்போது வில்லன்களாகி விட்டனர்?” என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே சாடியுள்ளார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி: விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 29- தமிழ்நாட்டில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களி லும் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலம் ஜூன் 5 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு இயலாத நிலையில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய, விண்ணப்பதாரர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்
சென்னை, மே 29- வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று (மே 31) இரவு 10 மணிக்கு சென்னை திரும்பு கிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23 ஆம் தேதி சென்றார். இந்த சந்திப்பின்போது, புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசி னார். சில நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டார். சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சி களை முடித்துக் கொண்டு 25 ஆம் தேதி ஜப்பான் சென்றார். அங்கு ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டா ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜப்பான் வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையை வந்தடைகிறார்.