சென்னை, ஜூலை 9- சென்னையில் கொலை முயற்சி, சங்கிலி பறிப்பு, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 189 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மயிலாப்பூர் பிள்ளையார் கோவில் தோட்டத்தைச் சேர்ந்த சீனு என்கிற சீனிவாசன் (52), கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் மெயின் ரோடு ஜனா (எ) ஜனார்த்தனம் (32), ஈக்காட்டு தாங்கல் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அரவிந்த் சுப்பிரமணியன் (36) மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதே போல ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விக்கி (26), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் குமார் (41), ஸ்டான்லி (26), ஆந்திர மாநிலம் கோதாவரியைச் சேர்ந்த பேடுரி சீனு, பெரியமேடு பரத் என்கிற மூக்குபரத் (25), விஜயரங்கன் (24) உள்ளிட்ட 9 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தர விட்டதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.