states

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு தீபாவளி கொண்டாட சென்ற 8 லட்சம் பேர்

சென்னை, நவ.11- தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் நக ரங்களில் உள்ள பேருந்து நிலையங்க ளில் சனிக்கிழமையன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, சென்னையிலிருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தொழில் நகரான திருப்பூர், கோயம்புத்தூரிலிருந்தும் ஏராளமா னோர் சொந்த ஊர்களுக்கு பயணித்த னர். கொண்டாட்டங்களின் நகரான மது ரைக்கு பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவதற்காக தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாத புரம் மாவட்டங்களிலிருந்து வந்திருந்த னர். இதனால் மதுரையில் தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், காமராஜர் சாலை, கிழக்கு மாசிவீதி, நேதாஜி சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதி யது. மதுரை சித்திரைத் திருவிழா விற்கு நிகரான கூட்டத்தால் மதுரை நகரம் திக்குமுக்காடியது.

தீபாவளியையொட்டி சொந்த ஊர்  களுக்குச் செல்வதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தி ருந்தன. சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணி நிலவரப்படி 4.27 லட்சம்  பேர் பேருந்துகளில் பயணம் செய்  துள்ளனர். ரயிலில் பயணம் செய்த வர்களையும் சேர்த்தால் சுமார் எட்டு லட்சம் பேர் பயணித்துள்ளனர். இந்தாண்டு சென்னையில் 86,275  டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு 66,822 டிக்கெட்டுகள் ஆன் லைனில் பதிவாகியிருந்தது. கடந்தாண்டோடு  ஒப்பிடுகையில் சுமார் 31 ஆயிரம் பேர்  அதிகம் பதிவு செய்துள்ளனர். ஆன் லைன் முன்பதிவு தொடர்வதால் பயணி களை கொண்டு சேர்ப்பதில் போக்கு வரத்துக் கழகங்கள் புதிய சாதனை யை படைக்கும் என்று போக்குவரத் துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்ய  2.23 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள னர். தீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில், வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை 3,62,000 பயணி களும் சனிக்கிழமை காலை ஐந்து மணி  வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக மதுரை கோட்டத்திலிருந்து 565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பண்டி கைக்கு பின்பு நவம்பர் 13 முதல்  நவம்பர் 15 வரை 485 பேருந்துகளை யும் இயக்க உள்ளது.