states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஒரே மாதத்தில் 72 லட்சம்  வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை 

இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் வாயி லாக நடைபெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து  வரும் நிலையில், பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு நிகழ்த்தப்படுவதாக புகார் வெளியாகுவது வாடிக்கை யாகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்கு கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் மோசடி  புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும்,  72 லட்சம் கணக்கு களில் சுமார் 3 லட்சம் கணக்குகள் பயனர்கள் புகார்  அளிப்பதற்கு முன்பே தடை செய்யப்பட்டதாக  வாட்ஸ்  அப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தெலுங்கானா கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சி?

தெலுங்கானா சட்டப்பேர வைக்கு இந்த ஆண்டு  இறுதியில் தேர்தல் நடை பெறுகிறது. இந்த தேர்தலுக்காக ஆளும் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை தற்பொழுதே வெளி யிட்டுள்ள நிலையில், போல் டிராக்  கர் (poll Tracker) சார்பில் தெலுங்  கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் கருத்துக் கணிப்பு மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 580 பேர் பங்  கேற்று தங்களது கருத்துகளை தெரி வித்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர்  சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி  ஆட்சியை இழக்கும் என்றும், மாறாக  தனி பெரும்பான்மையுடன் காங்கி ரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி 42 சதவீத ஓட்டு களை பெற்று 63 முதல் 69 தொகுதி களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும்  எனவும், பிஆர்எஸ் கட்சி 34 சத வீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்று 35  முதல் 40 தொகுதிகளில் மட்டுமே வெல்லும். பாஜக 9 சதவீத ஓட்டுக்கள் பெற்று 3 முதல் 5 தொகுதிகளிலும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 10 சதவீத ஓட்டுகள் பெற்று 2  முதல் 5 தொகுதிகளை கைப்பற்ற லாம் என கருத்துக்கணிப்பில் தக வல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசில் இணைந்த  இந்திய ஹாக்கி அணி கேப்டன்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்ட னான பிரபோத் டிர்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்  தார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர்  மாவட்டத்தில் உள்ள தல்சாரா தொகுதி பழங்குடியின ருக்கு அரசுத் திட்டங்களால் எந்தப் பலனும் கிடைப்ப தில்லை. தல்சாரா மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி னார். கடந்த சட்டமன்ற தேர்தலில், தல்சாரா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனையை திசை திருப்பிய “துர்கா வாஹினி

சலீம் சர்ச்சை மிகுந்த புத்தகம் ஒன்றை  விற்றதாகவும், இந்த புத்தகத்தை இங்கு விற்கக்கூடாது என துர்கா வாஹினி  அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் வற்  புறுத்தியுள்ளார். ஆனால் சலீம் மறுக்  கவே என்னை நட்புக்கு அழைப்பதாக வும், கையை பிடித்து இழுத்ததாகவும் கூறி அந்த பெண் கூப்பாடு போட “துர்கா  வாஹினி” அமைப்பில் இருந்த ஆண்கள் சலீம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக வெளியாகி யுள்ள வீடியோவில் சலீம் கையை பிடித்து  இழுக்கவில்லை. புத்தகத்தை காண் பித்து மட்டுமே சலீம் வாக்குவாதம் செய்கி றார். அடுத்த நொடியில் சலீம் மீது தாக்கு தல் நடத்தப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சலீம் மீது மாதவ் நகர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்  கும் தொடரப்பட்டுள்ளது. 

கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, செப்.5- மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  2016 அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. வரன்முறை படுத்துவதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் நிறை வடைந்தது மேலும் கால அவகாசம் நீட்டித்துள்ளது.

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்

சென்னை, செப்.5- சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்த சசிகலா, இள வரசி, பெங்களூரு பரப்பன அக்ரஹார  சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  அப்போது, இருவரும் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை பெற்ற தாக புகார் எழுந்தது. இது தொடர்பான  வழக்கில் லோக் ஆயுக்தா நீதிமன்றம், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலைய 2ஆவது அணு உலையில் உற்பத்தி 

மாமல்லபுரம், செப்.5- கல்பாக்கம் அணுமின் நிலையத் தில் உள்ள இரண்டாம் அணு உலை  கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராம ரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பணி கள் முடிந்தது சோதனை ஓட்டத்திற்கு பிறகு செப்.5 அதிகாலை மீண்டும் மின்  உற்பத்தி தொடங்கியது. இதன் முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி  செய்து வருகிறது. இது படிப்படியாக உயர்ந்து ஓரிரு வாரங்களுக்கு மீண்டும் சராசரியான 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் என அணுமின்  நிலைய மின்சார உற்பத்தி தொழில் நுட்ப பிரிவு வட்டாரம் தெரிவிக்கிறது. 

உதயநிதியை  எதிர்ப்பது ஏன்? வைரமுத்து கேள்வி

சென்னை, செப்.5- சனாதன தர்மம் பற்றி அமைச்சர்  உதயநிதியின் கருத்துக்கு கவிஞர்  வைரமுத்து ட்விட்டரில் வெளியிட் டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமாக உள்ள கருத்துருவங்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக்  கருத்து. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு கருத்து. திருக்குறளை தான் உதயநிதி பேசியிருக்கிறார். திருவள்ளுவரை கொண்டாடுகிறார்கள், திருக்குறளை பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்?  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் பல்கலை.யில் விசாரணை

வேலூர்,செப்.5-  முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து  திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி துறை  கூடுதல் செயலாளர் விசாரணை  மேற்கொண்டார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டி லுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் அல்லாத பணியாளர் கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக முன்னாள் பேராசிரி யர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.  பல்கலைக்கழகத்தில் சுமார் ரூ.112 கோடிக்கு நிதி நிர்வாக  முறைகேடுகள், நடந்ததாக வும் பல்கலைக்கழகத்திற்கு  கொள்முதல் செய்த கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தமிழ்நாடு ஒப்பந்த வெளிப்படை தன்மை  சட்டத்தை மீறி பல்கலைக் கழகத்திற்கு பண இழப்பை ஏற்படுத்தியது மற்றும் பல்கலைக்கழக தேர்வு முறை கேடு உள்ளிட்டவைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் (செப்.5) திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி துறை கூடுதல்  செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் விசாரணை  நடத்தினார். மேலும், மனு தாரரான முன்னாள் பேராசிரியர் இளங்கோவனிடமும் விசா ரணை நடத்தப்பட்டது.