states

ரயில் மோதி 6 பேர் பலி

ஸ்ரீகாகுளம்,ஏப்.12- ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில்ரயில் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். கவுகாத்தி நோக்கி சென்றுகொண்டிருந்த அதி விரைவு ரயில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக படுவா என்ற கிராமத்தில் நின்றது. அப்போது ஒரு சிலர் ரயிலிலிருந்து இறங்கி பக்கத்து தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த கொனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றவர்கள்  மீது மோதி யது. இதில் ஆறு பேர் பலி யாகினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா முத லமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்துள் ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.