கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி வேதநகர் சானல்கரை சாலை சீரமைப்பு பணியினை மாநகர மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்வில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர், பாலசுப்பிரமணியன், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சுப்ரமணியம், உட்பட பலர் உடனிருந்தனர்.