சென்னை, பிப்.28- கடந்த 6 ஆண்டுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கான நிதி ரூ.5318 கோடி செலவு செய்யப்படாமல் உள்ளது. அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டுக் காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுமை யாகப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பட்டிய லின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட துணைத்திட்ட நிதி முறை யாக செலவு செய்யப்படவில்லை என்ற தக வல் அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது ஆறு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 75 ஆயிரத்து 930 கோடியில் ரூ.5318 கோடி செலவு செய்யப்படவில்லை. இதில் அதிகபட்சமாக 2021-22 ஆம் நிதி யாண்டில் மட்டும் ரூ.2,418 கோடி பயன்படுத்தப் படவில்லை. மேலும், 2022-23 நிதியாண்டுக்கு துணைத் திட்டத்தின் கீழ் ரூ.16,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 2022 டிசம்பர் வரை ரூ.10,466 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்ற உண்மையும் சுடுகிறது. 2019-20 ஆம் ஆண்டு துணைத்திட்ட ஒதுக் கீட்டில் செலவு செய்யப்படாதது 3.78 சதவீதம். 2019-20 ஆம் ஆண்டு துணைத்திட்ட ஒதுக்கீட்டில் செலவு செய்யப்படாதது 3.78 சதவீதம், 2020-21 இல் செலவு செய்யப்படாதது 6.77 சதவீதம். 2021-22 இல் செலவு செய்யப்படாதது 16.81 சத வீதம், இப்படி செலவு செய்யப்படாத தொகை சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந் துள்ளது. 2022-23 டிசம்பர் வரை 63.65 சதவீதம் செலவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி யைத் தருகிறது.
மேலும், பட்டியலினம் மற்றும் பழங்குடி யினர் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் ரூ. 8,865 கோடி ரூபாய் பொதுத் திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டதையும் தகவல் பெறும் உரி மைச் சட்ட பதில் வெளிப்படுத்துகிறது. இது துணைத் திட்ட நெறிகளுக்கு முரணானது. தமிழ்நாடு அரசின் இத்தகைய அணுகுமுறை சமூக நீதிக் கோட்பாடுகளை வலுப்படுத்த உத வாது என்பதை அழுத்தமாக சுட்டிக் காட்ட விழைகிறோம். மேற்கண்ட தகவல்களைத் திரட்டிய மதுரை யைச் சார்ந்த சமூக ஆர்வலர் எஸ். கார்த்திக் அவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.
சிறப்பு சட்டத்தை நிறைவேற்றுக!
எனவே, பலகட்ட போராட்டங்களுக்குப் பின் னர் உருவாக்கப்பட்ட துணைத்திட்ட நிதியின் விதிமுறைகள் எக்காரணம் கொண்டும் மீறப் படக்கூடாது; இந்நிதியை முறையாக பயன் படுத்தி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; துணைத் திட்ட நிதி வேறு பொதுத் திட்டங்களுக்கு பயன்படுத்து வது நிறுத்தப்பட வேண்டும்; கடந்த ஆண்டு களில் செலவழிக்காமல் விடப்பட்டுள்ள துணைத் திட்ட நிதியைக் கணக்கிட்டு அது வீணாகாமல் உடனே நடப்பு நிதியாண்டிலும், எதிர்வரும் நிதியாண்டிலும் உடனடியாக பயன்படுத்தப்பட வேண்டும்; நடப்பு நிதியாண் டில் ஒதுக்கீட்டிற்கும் செலவினத்திற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆந்திராவில் 2013 இல் கொண்டுவரப்பட் டதைப் போல, பின்னர் கர்நாடகாவிலும் நிறை வேற்றப்பட்டு இருப்பதைப் போல எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களின் அமலாக்கத்தை முறைப்படுத்த சிறப்பு சட்டம் எதிர்வரும் தமிழ் நாடு சட்டமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.