சென்னை, ஜூலை 13- வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் யாருடையது என்று எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- அதிமுகவைத் தொடங்கிய போது அதற்கு தில்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர் செல்வம் கூட்டத்திற்கு தில்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம் மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு? பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்? பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார். புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்.
பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார். புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார். வழக்குகள் போட்டு திமுக பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித்துறை - அமலாக்கத்துறை - சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா? பொதுக்குழுவில் திமுகவை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கு கிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா? தி.மு.க. குடும்ப அரசியல் நடத்து கிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக் காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர் தான் பழனிசாமி. இதோ அண்மை யில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்க ளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டு பிடிக்கப்பட்டி ருப்பதாக செய்தி வெளியாகி யுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்? கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றி யும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.