states

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 450 பணி நியமன நேர்காணல் திடீர் ரத்து

மதுரை, டிச.18- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்  டிச.14 முதல் டிச.20 வரை நடைபெறவிருந்த 450 காலிப் பணி யிடங்களுக்கான நேர்காணல் திடீரென ரத்துசெய்யப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மதுரை மண்டலப் பிரிவு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள் முதல் செய்கிறது. இதற்காக கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவியாளர்கள், காவலர்கள் ஆகியோரை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டி ருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் 150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பொது விண்ணப்பங்கள் மூலமும், வேலை வாய்ப்பகத்தின் மூலம் இந்தப் பணிகள் நிரப்பப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த நிலையில் திடீரென நிர்வாகக் காரணங்களைக் காட்டி  நேர்காணலை ரத்துச் செய்துள்ளார்,

மதுரை மண்டல மேலாளர் அருண் பிரசாத். இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய அருண் பிரசாத், “2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணி நியமனம் நடை பெறவில்லை. 2019-ஆம் பணியில் சேர்ந்தவர்கள் இந்தாண்டி ற்கான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடி யுள்ளனர். 2019-ஆம் ஆண்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டியுள்ளது. எனவே நடைபெறவிருந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாவது வாரத்திற் குள் பணி நியமனம் பூர்த்தி செய்யப்படும்” என்றார். 450 பணியாளர்கள் இன்றி எப்படி நெல் கொள்முதல்  நடைபெறும் எனக் கேட்டதற்கு, “ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பின்னர் தான் கொள்முதல் அதிகமாக இருக்கும். தேவை யெனில் அருகாமை மாவட்டங்களிலுள்ள ஆட்களை அழைத்துக்கொள்வோம்” என்றார்.பணி நியமன அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே இந்தப் பிரச்சனை உயரதி காரிகளுக்கு தெரியாதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘‘2019-ஆம் ஆண்டு பணியாற்றியவர்கள் விளம்பர அறிவிப்பை  பார்க்கவில்லை, படிக்கவில்லையென்கின்றனர்’’ என பதிலளித்தார்.