கவுகாத்தி, ஜூன் 24- அசாமில் ஏற்பட்டு உள்ள கடும் வெள்ளப்பெருக்கால் 4.88 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் பெய்து வரும் தொடர் மழை யால் வெள்ளப்பெருக்கு பாதிப்பு மேலும் கடுமையாகியுள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மேலும் பல புதிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நெமதிகாட் (ஜோர் ஹாத்) பகுதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்து உள்ளது. அசாமின் நாகோன் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த தெருவைக் கடக்க கிராம வாசிகள் வாழை கட்டைகளைப் பயன் படுத்துகின்றனர் பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடு கிறது. கடந்த 24 மணிநேரத்தில் வெள்ள நீரானது புதிய பகுதிகளிலும் புகுந்து உள்ளது. அசாம் வெள்ளப்பெருக்கால் 16 மாவட் டங்களை சேர்ந்த 4.88 லட்சம் மக்கள் பாதிக் கப்பட்டு உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அசாமில் வெவ்வேறு பகுதிகளில் அதிக மழை பொழிவும் மற்றும் இடி, மின்னலும் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அசாம் வானிலை ஆய்வு மையம் சனி யன்று மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்க ளில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான கால்நடை வளர்ப்பு பிராணிகள் மற்றும் கோழிப் பண்ணைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன.