சென்னை, ஜூன் 24- தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகள் கட்ட வேண்டிய மின் கட்டண நிலுவை தொகை ரூ.310 கோடியை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 60 நாட்கள் அவகாசம் அளிக்கப் படுகிறது. அப்படியும், அவை குறித்த காலத்தில் கட்டணத்தை செலுத்துவதில்லை. தற்போது, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்பு கள், 1,900 கோடி ரூபாயும்; குடிநீர் வாரியம், 2,600 கோடி ரூபாயும் மின் கட்டணம் நிலுவை வைத் துள்ளன. பொதுவாக நிலுவை மின் கட்டணத்தை மொத்தமாக செலுத்த வேண்டும். தவணையில் செலுத்த அனுமதி கிடையாது. தற்போது சிறப்பு சலுகையாக, 50 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ள சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகள், தவணையில் செலுத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கோவை மாநகராட்சி ரூ. 95 கோடி, மதுரை ரூ. 87 கோடி, திருப்பூர் ரூ. 55 கோடி, சேலம் ரூ. 73 கோடி நிலுவை தொகையை 20 மாதங்களுக்கு கணக்கிட்டு வசூலிக்கப்பட உள்ளது. நிலு வைத் தொகையுடன், மாதாந்திர மின் பயன்பாட்டு கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும். அதற்கு ஏற்ப தொகையை வசூலிக்குமாறு பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.