புதுதில்லி, ஜுலை 24- உக்ரைனிடம் இருந்து வாங்குவதற் கான பணியாணை ரத்து செய்யப்பட்ட நிலையில் 39,000 ரயில் சக்கரங்களை சீனாவிலிருந்து இந்தியா வாங்குகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் மக்களவையில் உறுதி செய்து கூறுகையில், சீன நிறு வனமான ‘தயூனி’யிடமிருந்து எல்எச்பி ரயில் பெட்டிகளில் பயன்படுத்தும் 39,000 சக்கரங்கள் வாங்கப்படும் என்றார். முன்ன தாக, உக்ரேனிய நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன, ஆனால் உரிய நேரத்தில் அவர் களால் வழங்க முடியவில்லை. இதற்கி டையில், உக்ரைன் நிறுவனத்தின் விலை யை விட 1.68 சதவிகிதம் கூடுதலாக செலுத்தி சீனாவில் இருந்து சக்கரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2021-22இல் எல்லைப் பதற்றம் இருந்த போதிலும் சீனாவிலிருந்து இறக்குமதி 45.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று வர்த்தக அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 0.61 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.