சென்னை, ஆக. 31- புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ள நிலையில் தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் ரயில்கள் என்னென்ன என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற தும் சொகுசு வசதிகளும், விரைவு பயணமும் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் பயணிகளின் ஆர்வம் மட்டும் குறைய வில்லை. இந்நிலையில் புதிதாக 7 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அதில் தெற்கு ரயில்வேயின் கீழ் 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிகிறது. அதில் ரயில் எண் 20687 / 20688 கொண்ட விஜயவாடா - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அடங்கும். மேலும் ரயில் எண் 20631 / 20632 கொண்ட திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கேரளாவிற்கு ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இதில் தமிழகத்திற்கு மட்டுமே இரண்டு ரயில்கள் வரவுள்ளன. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெங்களூரு வழியாக சென்னை - மைசூரு இடையேயும் சென்னை - கோவை இடை யேயும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனுடன் மேலும் இரண்டு ரயில்கள் சேர்ந்தால் தமிழகத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரிக்கும். மேற்குறிப்பிட்ட ரயில் சேவையில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதுரை, திண்டுக் கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் கூறப்படுகிறது. கேரளாவிற்கு புதிதாக ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரவுள்ளது. ஆனால் இதற்கான வழித்தடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்கின்றனர். மங்களூரு முதல் எர்ணாகுளம் இடையில் ரயில் சேவையை கொண்டு வர அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டிலேயே அதிகப்படியானோர் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எது என்று கேட்டால் கேரளாவைத் தான் இந்திய ரயில்வே நிர்வாகம் கைகாட்டுகிறது. கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் இடையில் அம்மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேசிய அளவில் கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புதிய சாதனை படைக்கும் என்கின்றனர். இந்நிலையில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வருவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதுதவிர தென்னிந்தியாவில் பரிந்து ரைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடங்கள் என்று பார்த்தால், பெங்களூரு முதல் கோவை, பெங்களூரு முதல் திருப்பதி, பெங்களூரு முதல் கல்புர்கி, கொச்சி முதல் மங்களூரு, கொச்சி முதல் பெங்களூரு, மங்களூரு முதல் மைசூரு, சென்னை சென்ட்ரல் முதல் செகந்தி ராபாத், சென்னை எழும்பூர் முதல் கன்னி யாகுமரி, திருப்பதி - சென்னை - புதுச்சேரி ஆகியவற்றை சொல்லலாம்.