நியூசிலாந்து அணிக்கெ திரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
காசி தமிழ் சங்க நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தாலும், பாஜக அதனை உரிமை கொண்டாட முடி யாது. தமிழ்நாடு அற நிலையத்துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள் ளது. அந்த துறைக்குதான் பெருமை சேரும். பாஜக உரிமை கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழ கிரி சென்னை சத்திய மூர்த்திபவனில் பேசி னார்.
கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் சனியன்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்த நிலையில், தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் சென்னை காமராஜர் சாலை, அண்ணா சதுக் கம், ராயப்பேட்டை, கிண்டி, ஆழ்வார் பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதி களில் கார், இருசக்கர வாக னங்களை போலீசார் தீவிரமாக சோதனை யிட்டனர்.
கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு மருத்து வர்கள் செய்த அறுவை சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை; ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு போடப்பட்ட கம்பிரசன் பேண்டேஜ் கட்டை உரிய நேரத்தில் அகற்றாமல் அலட்சியமாக இருந்த தால்தான் பிரியா உயி ரிழந்துள்ளார் என தமிழ் நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் கூறினார்.
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசிவருவ தால் நியூயார்க் பகுதி மிக கடுமையமாக பாதிக்கப் பட்டுள்ளது. வடக்கு நியூ யார்க்கின் ஆர்ச்சர்ட் பார்க், நேச்சுரல் ப்ரிட்ஜ் பகுதிகளில் 6 அடிக்கு மேல் பனி மூடியுள்ள தால் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடு களை நிரந்தர உறுப்பினர் களாக சேர்த்து ஐநா பாது காப்பு கவுன்சிலை விரிவு படுத்த வேண்டும் என ஐநா சபையின் முழுமை யான பொது குழு கூட்டத் தில், பிரான்ஸ் நாட்டிற் கான துணை பிரிதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல வங்காள நடிகை ஐந்த்ரிலா (24) மார டைப்பால் காலமானார். பலமுறை நெஞ்சுவலி காரணமாக பாதிக்கப் பட்டு குணமடைந்த நிலையில், மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு ஹவுராவில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.