states

4 மாநிலங்கள்; 50 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை, ஏப்.25- தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்  நாடகா என 4 மாநிலங்களில் 50 இடங்களில்  இரண்டாவது நாளாக வருமான வரித் துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். ‘ஜி ஸ்கொயர் குரூப்ஸ்’ குழும நிறு வனங்களில் ஒன்றான ‘ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ்’ நிறுவனம் கட்டுமானம் மற்றும் நில விற்பனை தொழிலில் கடந்த 10 ஆண்டு களாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா,  தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநி லங்களில் இந்நிறுவனம் செயல்படுகிறது.  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்நிறு வனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஜி ஸ்கொ யர் அலுவலகம், ஆழ்வார்பேட்டை, கிழக்கு  கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை  உட்பட பல்வேறு இடங்கள், அலுவலகங்க ளில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்  வாயன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.  எம்எல்ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரி கள் சோதனை மேற்கொண்டனர். எம்எல்ஏ காருக்குள்ளும் சோதனை நடத்தப்பட்டது. கோவை அவிநாசி சாலை, பீளமேட்டில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகம், புளிய குளத்தில் உள்ள கார்த்திக்கின் உறவினர்  வித்யாசாகர் ராமதாஸ் என்பவரது வீடு, திருச்சியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோல, ஓசூர், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத் என  சுமார் 50 இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன  அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட் டது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடை பெற்று வருகிறது.