சென்னை, மே 18- சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நில விற்பனையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேர்ந்த சிறுமி தன்னுடன் பள்ளியில் பயிலும் சக மாணவியின் வீட்டிற்கு தினமும் படிக்க சென்றுள்ளார். அப்போது சக மாணவியின் தந்தை மயக்க மருந்து கலந்த பிஸ்கெட்டை சிறுமிக்கு கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி யுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றமிழைத்த ரியல் எஸ்டேட் உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி குற்றவாளிக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டதால் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவரிடமிருந்து வசூலிக் கப்படும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும், அரசு சார்பில் சிறுமிக்கு இழப்பீடாக ரூ.7லட்ச வழங்க வேண்டும் எனவும் உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.