திண்டுக்கல், ஆக.20- திண்டுக்கல்லை சுற்றியுள்ள வெள்ளோடு,நரசிங்கபுரம், சின்னாளப் பட்டி, பெருமாள் கோவில் பட்டி, சாணார்பட்டி, கொசவபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் பூ விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் பூக்களை திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு வரக்கூடிய பூக்களை திருச்சி, சென்னை, தஞ்சை, சீர்காழி, சிதம்பரம், மாயவரம், கும்பகோணம், தாராபுரம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகளும் பொதுமக்களும் வாங்கிச் செல்வது வழக்கம். சென்ற மாதம் ஆடி மாதம் என்ற காரணத்தால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் திருநாளை முன்னிட்டும் கேரள மாநிலத்திற்கு மட்டும் தினசரி 20 டன் பூக்கள் விற்பனையாகி வருவதாலும் தமிழகத்தில் தொடர் முகூர்த்தம் காரணமாக பூக்கள் விலை அதிகரித்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 1200 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனையான நந்தியாவட்டைப் பூ 1000 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப்பூ 600 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனையானது.