- இந்திய கடற்படைக்கு சொந்தமான “வார்ஷிப் டிசைன் பீரோ” நிறு வனம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் வடி வமைத்த ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கேரளா மாநிலம் கொச்சி யில் நாட்டுக்கு அர்ப் பணித்தார் பிரதமர் மோடி. (செய்தி: 6)
- ஜார்க்கண்ட் சட்டசபை யின் சிறப்புக் கூட்டத்தொ டர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கூடுகிறது. ஒரே ஒருநாள் நடை பெறும் இந்த சட்டசபை கூட்டத் தொடரின் மூலம் ஜார்க்கண்ட் அரசு செய்த பணிகளை பொதுமக்களி டம் எடுத்துரைக்க விரும்புகிறோம். பெரும் பான்மை அரசாங்கமாக இருக்கும்போது பெரும் பான்மையை நிரூபிக்க என்ன இருக்கிறது என ஜார்க்கண்ட் அமைச்ச ரும், காங்கிரஸ் தலைவரு மான பன்னா குப்தா பேசியுள்ளார்.
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் பல வெளி யாகியுள்ளதால், வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக் கூடாது என தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
- குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் இருந்து மேலும் 20 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
- 2017-ஆம் ஆண்டு முதல் பீகார் மாநிலத்தில் ஆசி ரியர் தகுதி தேர்வு (TET) நடத்தப்படாததால் போட்டித் தேர்வாளர்கள் விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தக் கோரி பாட்னாவில் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
- அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் சவுபே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். துணைத் தலைவராக கர்நாடக கால்பந்து சங்கத் தலைவர் என்.ஏ.ஹரீஸூம், பொரு ளாளராக அருணாச்சல பிரதேசத்தின் கிபா அஜய் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 14 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 14 வேட்பாளர் களும் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
- மலேசிய முன்னாள் பிரத மர் நஜிப் ரசாக்கின் ஆட் சிக் காலத்தில், அவரது மனைவி ரோஸ்மா மன் சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங் குவது தொடர்பான ஒப்பந் தங்களில் ஊழல்செய்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரோஸ்மா மன்சோருக்கு 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்ட னையும் விதிக்கப் பட்டுள்ளது.
- நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று இஸ்ரேலை சிரியா எச்சரித்துள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் முக்கிய நகரங்களில் ஒன்றான அலெப்போ ஆகியவற்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒரு விரிவான ராணுவ மோதலுக்கு இஸ்ரேல் அழைத்துச் செல்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ள சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தத் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டு சிரியா மவுனமாக இருக்காது. இதற்கான விலையை விரைவில் இஸ்ரேல் தர வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது.
- தாராள வர்த்தக உடன்பாடுகளை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் விவசாயப் பொருட்களை சேர்க்க வேண்டாம் என்று தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரின் பழங்குடி அமைப்புகள் கோரியுள்ளன. பழங்குடி அமைப்புகளுக்கும், அரசுத்தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. விவசாயப் பொருட்களைச் சேர்ப்பதால் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
- தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது குறித்து கடுமையான அதிருப்தியை துனீசியாவின் ஜனாதிபதி கைஸ் சயீது தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளில் ஒருவரான பார்பரா லீப்பிடம் நேரிலேயே வெளிப்படுத்தினார். நாட்டின் இறையாண்மை மற்றும் தேச நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் உள்ள சுதந்திரத்தன்மை ஆகிய இரண்டையும் துனீசியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று ஜனாதிபதி கைஸ் சயீது கூறியுள்ளார்.