states

தங்கம் கடத்தலுக்கு உதவிய 2 ஊழியர்கள் கைது

சென்னை, அக்.26- சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி  வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  சமீபகாலமாக கிலோ கணக்கில் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வரு கின்றன. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தங்கம் கடத்தல் குறையவில்லை. மேலும் தங்கம் கடத்தலுக்கு சென்னை விமான நிலையம் முக்கிய இடமாக மாறி  வந்தது. இந்த நிலையில் தங்கம் கடத்த லுக்கு உதவியதாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த  துப்புரவு ஊழியர்கள் 2 பேர் பிடிபட்டுள்ள னர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பலுக்கு துப்புரவு பணியில்  ஈடுபடும் தொழிலாளர்கள் சிலர் உதவி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு பணியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வரும் சீனிவாசன் என்பவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவரிடம் சோதனை நடத்தினர். அவர், தனது உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் தீவிர  விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 3.70 கிலோ தங்கம் பதுக்கி வைத் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாடு களில் இருந்து வரும் கடத்தல் கும்பலிடம் சென்னை விமான நிலையத்துக்குள் சீனிவா சன் தங்க கட்டிகளை வாங்கி அதை விமான  நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்து உதவி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து  கடத்தி வரப்பட்ட மொத்தம் 4.70 கிலோ தங்க  கட்டிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.70 கோடி ஆகும். மேலும் இந்த தங்கம் கடத்தலுக்கு உடன் வேலை பார்த்து வரும் மற்றொரு ஒப்பந்த ஊழியர் தினகரன் என்பவர் உதவி  வந்தது தெரிந்தது. அவரையும் அதிகாரி கள் கைது செய்தனர்.