அதிகாலையில் மணக்க மணக்க படுக்கையிலேயே பில்டர் காபி, அல்லது, “சொன்னால் புரியாது, சுவைத்தால் மறக்காது” என்ற தேநீர் அருந்திவிட்டு, உங்க பேஸ்ட்டில் உப்பு இருக்கா? என்ற பற்பசையில் பற்களை துலக்கிவிட்டு குளியலறைக்கு செல்கிறோம். அங்கு போலீஸ் ஆவதற்கான சோப்பு, டாக்டர் ஆவதற்கான சோப் என ஏதாவது ஒன்றை பயன்படுத்தி குளித்துவிட்டு காலை உணவு அருந்திவிட்டு பணிகளை துவக்குகிறோம். அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வருகிறோம். தொலைக்காட்சி, இரவு உணவு, பின்னர் படுக்கை!
வீட்டில் இருக்கும் தாய்மார்கள் குழந் தைகளை தயார் செய்து பள்ளி, கல்லூரி களுக்கு அனுப்புதல்! மாலையில் அவர் களை வரவேற்று டிபன், டியூசன் என்று மீண்டும் தயார் செய்தல்!! இதற்கிடையில் உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்க ளுக்கு போக்குவரத்து நெரிசலில் செல்லு தல், வருதல் என்று நமது குறுகிய வாழ்க்கை பயணம் இயந்திர கதியில் அன்றாடம் ஆவியாகிறது! இப்படி இருபத்திநாலு மணி நேரமும் சாவி கொடுத்த பொம்மை போல நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம். மனிதக் கூட்ட மாகிய நாம் யார்? நாம் வாழும் பூமி எப்படி உருவானது? எப்படி இயங்குகிறது? எவ்வ ளவு காலம் இயங்கும்? நம்மை ஆள்ப வர்கள் என்ன செய்கிறார்கள்? வருங்காலத் தில் நமது சந்ததியினரின் நிலைமை என்ன வாகும்? என்ற சிந்தனை சிறிதளவாவது நமக்கு வருகிறதா, இல்லையா? புரிய வில்லை! புரிந்து கொண்டால் தாங்க, இப்புவியில் நாம் வாழ்வதற்கு அர்த்தம் தெரியும்!
இன்னொரு பால்வெளி மண்டலம்
நமது உலகம், அதாவது நாம் வசிக்கும் பூமி சூரியக் குடும்பத்தின் (Solar System) ஓர் உறுப்பினர். சூரியன் என்னும் நட்சத்தி ரம்தான் நமது தாய் தந்தை! இக்குடும்பத் தில் 1. மெர்குரி 2. வீனஸ் 3. பூமி 4. செவ்வாய் 5. ஜுபிடர் 6.சனி 7. யுரேனஸ் 8. நெப்டியூன் என்ற எட்டு உறுப்பினர் கோள்களானது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வரு கிறார்கள்! இவை எப்படி உருவாயின? சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தில் (Universe) பெருவெடிப்பு ஏற்பட்டு, (Big Bank Theory) மாபெரும் நட்சத்திரக் கூட்டம் (Galaxy) உருவானது! அப்போது சிதறிய ஒரு சிறு தீக்கீற்று தான் நமது சூரிய குடும்பம்! லட்சக்கணக்கான நட்சத்திரக் கூட்டம் கொண்ட நமது கேலக்ஸிக்கு பால் வெளி மண்டலம் (Milkyway) என பெயரா கும். இந்த மண்டலம் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களை சங்குசக்கரம் போல வடிவமைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கி றது. அந்த அளவிற்கு நமது பிரபஞ்சம் விஸ்தீரமானது! அதற்கு எல்லை இல்லை! மற்றொரு கொசுறு தகவல் என்ன வென்றால், நமது பால்வெளி மண்டலம் போலவே, மற்றொரு கோடிக்கணக்கான நட்சத்திரங்களை கொண்ட ஒரு கேலக்ஸி நமது அருகில் சுற்றிக் கொண்டிருக்கிறது! அதன் பெயர் ஆண்ட்ரிமோடோ (Andromeda) என்பதாகும். உங்கள் தலை லேசாக சுற்ற ஆரம்பித்திருக்கும் என நினைக்கிறேன்!!
சூரிய ஒளி பூமிக்கு வர 8 நிமிடம்...
சரிங்க, போதும்! நாம் நமது பூமிக்கு வருவோம். பூமியில் மட்டும் தான் புவி ஈர்ப்பும், ஆக்ஸிஜனும், நீரும் உள்ளது. எழுபது சதவீதமான கடல் நீரும் முப்பது சதவீதமான நிலமும் கொண்டது. பூமி தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணி நேரமாகும். அதாவது ஒரு நாள்! 12 மணி நேர இரவு - 12 மணி நேர பகல்! சூரியன் என்றும் மறைவது கிடையாது. பூமி சுற்றும் போது ஒரு புறம் பகலும், மறுபுறம் இர வும் ஏற்படுகிறது! இதன் சுற்று (Spins) வேகம் மணிக்கு 1600 கிலோமீட்டர். இப் படி சுற்றிக்கொண்டே மணிக்கு ஒரு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த அசுர வேகத்தில் சுற்றினால் தான் ஒரு சுற்றுச்சுற்ற 365 நாட்கள் பிடிக்கிறது! அதாவது ஒரு வரு டம்! இப்படிப்பட்ட நமது பூமி தனது பணியினை யாருடைய தூண்டுதல் இல்லாமல், தானே அந்தரத்தில் இயங்கி வரும் அதிசய இயற்கை கோள் ஆகும். பூமிக்கும் சூரியனுக்கும் 15 கோடி கி.மீ. தூரம் ஆகும். சூரியனிலிருந்து சூரிய ஒளி நமது பூமிக்கு வர 8 நிமிடம் ஆகிறது. அதாவது ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்ச கி.மீ. வேகத்தில் பயணித்து நமது பூமிக்கு வந்து சேருகிறது! இந்த பூமியானது எப்போது எப்படி தோன்றியது? அதில் மனிதன் எங்ஙனம் உருவானான்? பெருவெடிப்பு நிகழ்ந்த பின், நெருப்புக் கோளமான நமது பூமி பல விண்வெளி மாசு படலங்களால் ஒன்றி ணைக்கப்பட்டு 600 கோடி ஆண்டுகளுக்கு முன் கோள வடிவில் சூரியக் குடும்பத் தின் மூன்றாவது உறுப்பினராக உருவெ டுத்தது. அதாவது பல இனிப்பு பூந்திகள் சேர்ந்து லட்டு ஆவதை போல!! தொடர்ந்து இரண்டு கோடி ஆண்டுகள் மழை பெய்தும், விண்கற்கள் விழுந்தும் பக்குவமான நிலையில் சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு செல் உயிரினம் (Unicellular Organism) தோன்றியது. கடலில் உரு வான இந்த முதல் நுண்ணுயிர் இனம்தான் படிப்படியாக ஏராளமான மாற்றங்க ளுக்கு உள்ளாகி, நாம் இன்று காணும் எல்லா உயிரினங்களும் உருவானதற்கு காரணமாகும். இந்த நிகழ்ச்சி நிரலைத் தான் பரிணாம வளர்ச்சி (evolution) என்று விஞ்ஞானிகள் விவரிக்கிறார்கள்!
2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்...
இப்படிப்பட்ட மாற்றங்களின் மூலம் தான் மனித இனமும் உருவானது. சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், பூமி யின் மீது (மெக்ஸிகோ நாட்டுப்பகுதி) மிகப் பெரிய விண்கல் அதிபயங்கர வேகத் தில் மோதியதின் விளைவாக அப்போது பூமியில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த டைனோசர் என்ற பெருத்த மிருக இனம் முற்றிலுமாக அழிந்தது. இருபது சதவீதமான பாலூட்டி இனங்கள் மட்டுமே நிலத்திற்குள் ஒளிந்து தப்பிப் பிழைத்தன. ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்குப் பின் பூமி ஓரளவு பசுமையான பின் ஒளிந்திருந்த பாலூட்டி இனங்கள் வெளிவந்து வாழத் துவங்கின. அந்த பாலூட்டி இனங்களின் பரிணாம வளர்ச்சியில் உராங்குட்டான், கிப்பன், கொரில்லா, சிம்பன்சி போன்ற குரங்கு இனங்கள் தோன்றின! இந்த வகையறாக்கள் மூலம் நாம் படிப்படியாக மாறி, மாறி உரு மாறி மனிதர்களாக ஆகியுள்ளோம்! அந்த ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியின் அழிவில் இருந்து தப்பிய பாலூட்டிகள் குரங்கினங்களாக பரிண மித்தன. அந்த உயிரின குரங்கு இனம் உணவு தேடலுக்காக 40 லட்சம் வருடங்க ளுக்கு முன் மரத்திலிருந்து இறங்கி இரு கால்களில் (bypedalism) நடக்க ஆரம்பித் தது மனித பரிணாமத்தின் முக்கிய திருப்பம் ஆகும். அதற்கு விஞ்ஞானிகள் லூசி என்று பெயரிட்டார்கள். அதன்பின் 25 லட்சம் ஆண்டு களுக்கு முன் கற்களை பயன்படுத்தும் ஹோமோ ஹெப்லியஸ் என்ற இனமாக வளர்ந்தார்கள் நம்முடைய மூதாதையர்கள். சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பை பராமரிக்கும் ஹோமோ எரக்டஸ் மனிதர்களாக ஆனார்கள். அதற்குப் பிறகு சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற முழுமை பெற்ற மனிதர்களாக பக்குவப்பட்டு உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கி றோம்!!
இங்ஙனம் உலகம் தோன்றியதையும், இயங்குவதையும், உயிர்கள் உருவானதை யும் நமது ஆரம்ப கால விஞ்ஞானிகளான கோப்பர் நிக்கஸ், கலிலியோ போன்ற வர்களும், சார்லஸ் டார்வின் உயிரினங்க ளின் தோற்றம் (The origin of the species) என்ற நூலிலும் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற வானவியலாளர்களின் கண்டுபிடிப்பாலும், மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற சமூகவியலாளர்களும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளனர். இப்போது உலகம் முழுவதும் வாழும் 800 கோடி மக் கள் அனைவரும் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற நவீன மனிதர்கள் தான் என்பதில் சந்தே கம் இருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் வேறு உடலமைப்பு கொண்ட மாற்று மனித கூட்டம் உலகில் இல்லை! தட்பவெப்ப நிலை மைகள் காரணமாகத்தான் மனிதர்களின் நிறங்கள் மட்டுமே மாறியுள்ளன. மற்றபடி உடல் உறுப்புகள், செயல்பாடு அனைத்துமே ஒரே மாதிரி தான்! ஆழமான, ஆதாரமான உண்மை என்னவெனில் உலக மக்கள் அனை வரும் உறவினர்கள் தான்! நாடுகள் 200 இருக்கலாம், எல்லைகளை அவரவர் பாது காக்கலாம், ஆனால் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே பூமியில் தான் அனை வரும் உள்ளோம்! வாழ்கிறோம்!!
அட்சயபாத்திரத்தை அழிக்கலாமா?
இந்த பூமி தான் நமக்கு அனைத்து வளங்க ளையும் கொடுத்து வாழ வைத்துக் கொண்டி ருக்கிறது. குடிப்பதற்கு நீரும், சுவாசிப்ப தற்கு ஆக்ஸிஜனும், உணவருந்த தானி யங்களும், காய்கறிகளும், ஆடைகளும், வாகனங்களை இயக்க எரிபொருட்களையும் அட்சய பாத்திரம் போல அள்ளிக் கொடுத் துக் கொண்டே இருக்கிறது! இப்படிப்பட்ட பொக்கிஷமான பூமிப்பந்தை பாதுகாப்பது நமது கடமை தானே!? இதனை உணராமல் நாட்டுக்கு நாடு யுத்தம், நாட்டிற்குள் அதி காரப் போட்டி, மாநிலங்களுக்குள் ஜாதி-மத கலவரங்கள்! வீட்டுக்கு வீடு சொத்து தக ராறு என தொடரும் பிரச்சனைகள் தேவை தானா? இது பரிணாம வளர்ச்சியல்ல! மனி தர்களின் வக்கிர புத்தியையே காட்டுகிறது. எதையும் எதிர்பார்க்காமல் இயங்கும் நம் உலகை நாம் புரியாமல், நாம் மட்டும் இயங்குவதால் பயன் ஏதுமில்லை! பலன் கள் பல கொடுத்து மனித இனத்தை பாது காக்கும் பூமியை பாதுகாத்து நமது சந்ததி யினரிடத்தில் ஒப்படைப்பது தாங்க உண்மை யான பரிணாம வளர்ச்சி! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஏதாவது ஒரு விண்கல் மீண்டும் நமது பூமியில் மோதி அழிவு ஏற்பட லாம்! ஆனால் அதற்கு முன்னதாக, நாம் இந்த பூமியை ஏன் அழிக்க வேண்டும்? கார்பன்டைஆக்சைடை உட்கொண்டு நம் சுவாசத்திற்காக ஆக்ஸிஜனை வெளிவிடும் மரங்களை நமது வசதிக்காக, உலகில் ஒரு நிமிடத்திற்கு 139 ஏக்கர் காடுகளை அழித்து வருகிறோம்! இதனால் அன்றாடம் ஆக்சிஜன் அளவு குறைகிறது. நமது ஆயுளும் சுருங்கு கிறது! மனிதர்களைப் பற்றி மரம் உணர் கிறது! மனிதனின் மண்டை மரங்களை உணர வில்லை! இப்ப புரியுதுங்களா? உலகம் எப்படி உரு வானது! மனிதன் எப்படி தோன்றினான் என்று! உலக வளங்களை சேதாரம் இல்லா மல் சொந்தங்கள் ஆகிய நாம் பகிர்ந்து உண்டால், உண்மையான சொர்க்கத்தை வாழும்போதே காணலாம்! பிரபஞ்சத்தின் தூசிதான் நமது சூரிய குடும்பம்! தூசியின் ஊசி முனையில் தான் நாம் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். நான் பரிணாம வளர்ச்சியின் கோட்டைத்தான் போட்டுள்ளேன். நீங்க பல நூல்களைப் படித்து ரோட்டை போடுங்கள்! பிரபஞ்சத்தின் பாதைகள் பல தெரியவரும்!!