“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாண வர்கள் அரசுப் பள்ளி களை நோக்கி வந்துள்ள னர். அதிமுக ஆட்சியின் போது 3% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இரு ந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர்” என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிஏஜி அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ளார்.
உத்தரகண்ட் மாநி லத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சந்தன் ராம் தாஸ் உடல்நலக் குறைவால் பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி புதனன்று காலமானார்.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 70 பில்லி யன் டாலர் (5.7 லட்சம் கோடி) பங்குகளை திரும்ப வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வர்த் தகத்தில் ஆல்பாபெட் டின் பங்குகள் 4% வரை உயர்ந்தன.
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சுரங்கப் பாதை, உயர்மட்ட பகுதி யில் பாதைகள் அமைத் தல் தொடர்பான அனை த்து பணிகளுக்கும் லார்சன் & டூப்ரோ என்ற நிறுவனத்திற்கு ரூ.299.46 கோடி அள வில் ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆதிதிராவிட மாணவர் விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்தது தொடர் பாக 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து அரசு கலைக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை மேற் கொண்டுள்ளார்.
என்சிஇஆர்டியால் நீக்கப் பட்ட பகுதிகளை மாண வர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கேரள பாடத் திட்டக் குழு உத்தரவிட்டு ள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தெரி வித்துள்ளார்.
450-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் மாமுக்கோயா (76) காலமானார்.
திருப்பூர் அரசு மரு த்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
பூஜ்ய ஈர்ப்பு விசையில் இருந்து விண்வெளி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள சுவீடன் நாடு ஏவிய ராக்கெட் அண்டை நாடான நார் வே நாட்டில் விழுந்தது. பனி படர்ந்த மலைப் பகுதியில் விழுந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லை.
கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் இருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்திய விமானத்தின், விமானி அறைக்குள் விமானியின் பெண் தோழியை அனு மதித்த விவகாரத்தில் விமானத்தின் ஒட்டு மொத்த பணியாளர் களும் நீக்கம் செய்யப்படு கிறார்கள்.
உலகச் செய்திகள்
பின்லாந்தில் பிறப்பு, இறப்பு விகிதங்களைக் கண்காணிக்கத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக பிறப்பு விகிதத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் புள்ளியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022 ஆம் ஆண்டில் மொத்த பிறப்பு விகிதம் 1.32 ஆக இருந்தது. 2021ல் இந்த விகிதம் 1.46 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 1.35 என்றும் இருந்தன. 2022 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 951 குழந்தைகள் பிறந்துள்ளன “ என்று கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் அட்டூழியங்களைப் பார்த்து எதுவும் செய்யாமல் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து இஸ்ரேல் மீறி வருகிறது என்றும், ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றும் தீர்மானங்கள் செயலாக்கம் பெறாமல் நிற்கின்றன என்றும் ஐ.நா.வுக்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி அமீர் சையது ஐராவனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக தற்போது ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும். தனது பணியை முழுமையாக நிறைவேற்ற வாக்காளர்கள் வாய்ப்பு தர வேண்டும் என்றும், கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது போராட்டம் அமெரிக்க மக்களின் போராட்டம் என்று சொன்னது இன்றும் பொருத்தமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.