states

10ஆம் வகுப்பு தேர்வு: மே 19 இல் முடிவு வெளியீடு!

சென்னை, மே 15- தமிழ்நாட்டில் மே 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மார்ச் மற்றும் ஏப்ரல் 2023 இல்  நடைபெற்ற 2022-2023 ஆம் கல்வி யாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று காலை 10 மணிக்கும் மேல்நிலை முதலாமாண்டு (11 ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் பேரா சிரியர் அன்பழகன் கல்வி வளாக கட்டி டத்தின் முதல் தளத்தில் வெளியிடப் படுகிறது. இந்த முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்தி லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் இயங்கும் தேசிய தகவலியல் மைய ங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூல கங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவு களை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப் பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை அறிந்து கொள்ளலாம். பள்ளி  மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற  பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ண ப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.