கூடங்குளத்தில் இந்திய - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் 2 அணு உலைகள் இயங்கி வருகின்றன. இதில் 2 வது அணு உலை கடந்த மார்ச் 25ம் தேதி அன்று வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 66 நாட்கள் நிறுத்தப்பட்டது. கடந்த 30ம் தேதி பணிகள் நிறைவு பெற்றது. தொடர்ந்து 2 வது அணுஉலையில் 250 மெகாவாட்டிலிருந்து மின் உற்பத்தி துவங்கியது.பின்பு படிப்படி யாக மின் உற்பத்தி உயர்த்தப்பட்டு ஞாயிற் றுக்கிழமை நிலவரப்படி 1,000 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டியது.இதன் மூலம் ஏற்கனவே இயங்கி வந்த முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2வது அணு உலை மூலம் உற்பத்தி செய்யப்படும் 1,000 மெகாவாட்டும் சேர்த்து மொத்த உற் பத்தியில் தமிழகத்திற்கு விகிதாசார அடிப்ப டையில் 1,152 மெகாவாட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.