states

பயனளிக்காத மோடியின் ‘‘உஜ்வாலா’’ திட்டம் காட்சிப் பொருளாக மாறிய 1.90 கோடி சிலிண்டர்கள்

புதுதில்லி, மே 13- பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர் களுக்கு சுத்தமான எரிபொருள் கிடைக்க  வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டில், பிரதான்  மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்த 90 லட்சம் பயனாளிகள் தங் களது எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வில்லை. மேலும் ஒரு கோடிக்கும் அதிக மான பயனாளிகள் எரிவாயு சிலிண்டர்களை ஒரு முறை மட்டுமே நிரப்பியுள்ளனர்.  இதுகுறித்த உண்மையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், (ஐஓசிஎல்), இந்துஸ் தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், (எச்பிசிஎல்), பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் (பிபிசிஎல்) ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள தகவல் அம்பலப்படுத்தியுள்ளது. இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து 2021-ஆம் ஆண்டு மார்ச் வரை இணைப்புகளைப் பெற்ற 65  லட்சம் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் களில் எரிவாயு நிரப்பிக்கொள்ள முன்வர வில்லை. இதேபோல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 9.1 லட்சம் பேரும் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 15.96 லட்சம் பேரும் எரிவாயு நிரப்பவில்லை.

கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்பாடு சரிவு

மேலும், எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.ஆயிரத்தை தாண்டிவிட்ட தால், கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன் பாடு 45 சதவீதத்திற்கும் கீழ்சென்றுவிட்டது. இதுகுறித்து, பெட்ரோலியம் தொடர்பான நிலைக்குழுவின் உறுப்பினர் பிரத்யுத் போர்டோலோய் கூறுகையில், இந்தத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது. இதில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் பெறு வதற்கு சிலிண்டருக்கான முழுத் தொகை யையும் செலுத்தியுள்ளனர்.  எரிவாயு மானியம் எண்ணெய் நிறு வனங்களால் அவர்களின் வங்கிக் கணக்கு களுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டா லும் அது பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்பது எங்களுக்குத் தெரி யாது. மேலும் சிலிண்டர்கள் பல வீடுகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இல்லை சிலிண்டர் பயன்பாட்டைக் குறை த்துக் கொண்டுள்ளனர் எனக் கூறினார்.