states

மகளிர் உரிமைத் தொகைக்கு 1.55 கோடி பேர் விண்ணப்பம்

சென்னை, ஆக.21- தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இது வரை 1.55 கோடி பெண்கள் விண்ணப் பித்துள்ளனர். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை  உயர்த்தி, சமூகத்தில் சுயமரி யாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால், ஜூன் 24 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்து விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டன. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட  முகாம்கள் ஆகஸ்ட் 5 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இது வரை 1.55 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி வழி யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக முதல மைச்சர், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்திலுள்ள தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்கள், முதியோர் ஓய்வூதியம் பெறும்  குடும்பங்களில் உள்ள ஓய்வூதி யதாரர் அல்லாத தகுதி வாய்ந்த  பெண்களும் கலைஞர் மகளிர்  உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க லாம் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 18, 19 மற்றும்  20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காதவர்கள் விரைவில்  இணைக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம் இனி நடத்தப்பட வாய்ப்பு இல்லை. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங் கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.