states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி 1.1 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி, டிச.31- நடப்பு 2022-23 நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி  விகிதங்கள் தொடா்ந்து 2-ஆவது காலாண்டாக உயர்த்தப்  பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையி லான இறுதிக் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக் கான வட்டி விகிதம் குறித்த விவரங்களை ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 8 சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகி தங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி 7.6 சதவிகிதத்தில் இருந்து  8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அஞ்சல் நிலைய  மூன்றாண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.8 சதவிகிதத்தில் இருந்து 6.9 சதவிகிதமாகவும், ஈராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.7 சதவிகிதத்தில் இருந்து 6.8 சதவிகிதமாகவும் உயா்த்தப்பட்டு உள்ளது. அஞ்சல் நிலைய ஓராண்டு கால வைப்புத் தொகைக்  கான வட்டி 5.5 சதவிகிதத்தில் இருந்து 6.6 சதவிகித மாகவும், ஐந்தாண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி  6.7 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 6.8 சத விகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகவும், விவசாயிகள் வளர்ச்சிப் பத்திர திட்டத்துக்கான வட்டி 7 சதவிகிதத்தில் இருந்து 7.2 சதவிகிதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், விவசாயிகள் வளர்ச்சிப் பத்திரத்துக்கான முதிர்வு காலம் 123 மாதங்களில் இருந்து 120 மாதங்க ளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வருங்கால வைப்புநிதித் திட்டம் (7.1 சதவிகிதம்), சேமிப்புக் கணக்கு (4 சதவிகிதம்), பெண் குழந்தைகளுக் கான சேமிப்புத் திட்டம் (7.6 சதவிகிதம்) ஆகியவற்றுக் கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

தேர்தல் அதிகாரி கடிதத்தை ஏற்க மறுத்த அதிமுக

சென்னை, டிச. 31- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் யாரும் இல்லை என்று கூறி தமிழகத்  தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய  கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்து விட்டது. உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய வுள்ளது. இதுகுறித்து ஜனவரி 16ஆம்  தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணை யம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் பங்கேற்குமாறு 8 தேசியக் கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல்  ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுகவுக்கு கடிதம் எழுதி னார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது. தமிழ கத் தலைமை தேர்தல் அதிகாரி குறிப் பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என்று கூறிய அதிமுக தலைமை கழக  நிர்வாகிகள் அந்தக் கடிதத்தை திருப்பி அனுப்பினர்.

தமிழகத்தில் 2 நாட்கள் பனிமூட்டம் நிலவும்

சென்னை, டிச. 31- வடதமிழக உள் மாவட்டங்களில் வரும் 2ஆம் தேதி வரை அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக, ஞாயிறு  மற்றும் திங்கட்கிழமை (ஜன. 1, 2) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை  நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி காலையில் லேசான பனிமூட்டம்  காணப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமை (ஜன. 3, 4) தமிழக கடலோர மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை அதிகரிப்பு

சென்னை, டிச. 31- தமிழகத்தில் தங்கத்தின் விலை  அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் சவரன் ரூ.39 ஆயிரத்துக்கு விற்ற  தங்கம் இம்மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு அவ்வப்போது தங்கத்தின் விலை சற்று குறைந்த போதிலும் அதிகளவு விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ. 41 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை கிராம் ரூ.5115க்கு விற்பனையானது, சனிக்கிழமை ரூ.5130 ஆக அதிகரித் துள்ளது. வெள்ளிக்கிழமை சவரன் ரூ. 40,920க்கு விற்கப்பட்டது. சனிக் கிழமை அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளி கிராம் ரூ. 74.50 லிருந்து ரூ.74.30 ஆகவும், கிலோ  ரூ.74,500இல் இருந்து ரூ.74.300 ஆகவும்  குறைந்துள்ளது.

இன்று முதல் ரேசன் கடைகளில் அரிசிக்கு தனித்தனி ரசீது

சென்னை, டிச. 31- நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) முதல் முறையாக 2 ரசீது அடித்து வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நியாய விலை  கடை ஊழியர்களுக்கு உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள சுற்றறிக்கையில், பொது மக்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் அரிசியை ஒரு ரசீதாக வும், ஒன்றிய அரசால் வழங்கப் படும் அரிசியை ஒரு ரசீதாகவும் வழங்க வேண்டும். இந்த முறையை பின்பற்றா மல் அத்தியாவசிய பொருட்கள்  வழங்கினால் அதற்குண்டான வேறு பாடு தொகையை அரசிற்கு செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி

சென்னை, டிச. 31- நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (35), பிரியா (28), செல்வி (55) , பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந் வர்களுக்கு நாமக்கல் அரசு  மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க  உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காய மடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் உத்தர விட்டுள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க ஜன. 31 வரை நீட்டிப்பு

சென்னை, டிச. 31- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீ ட்டிப்பு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22  லட்சம் விவசாய மின் இணைப்பு களும், 11 லட்சம் குடிசை வீடுக ளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்பு களுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக நவம்பர் 28 முதல்  டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட்டன. சனிக்கிழமையுடன் (டிச. 31) அதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. இன்னும் பலர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இந்நிலையில் மின் இணைப் புடன் ஆதார் எண்ணை இணைக்க  மேலும் ஒரு மாதம் கால அவகா சத்தை நீட்டிப்பது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆலோ சனை மேற்கொண்டனர். இதை யடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் 3 கோவில்களில்  முழு நேர அன்னதான திட்டம்

சென்னை, டிச. 31- திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் உள்ளிட்ட 3 கோவில்க ளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல மைச்சர் தொடங்கி வைத்தார். அதன் படி பழனி தண்டாயுதபாணி சுவாமி  கோவில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முழுநேர  அன்னதான திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகியவற்றில் நாள் முழுவ தும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயி லாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மாணவியின் கையை  உடைத்த ஆசிரியர்

 போபால், டிச.31- மத்தியப்பிரதேசத்தில் எழுத்துப்பிழையுடன் ஆங்கில வார்த்தையை சொன்ன ஐந்து வயது சிறுமியின் கையை முறித்த, ‘டியூஷன்’ ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த பிரயாக் விஷ்வகர்மா (22), இங்குள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில் சிறு வர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். அவரிடம் படித்த ஐந்து வயது சிறுமி, கிளியின் ஆங்கில வார்த்தையான ‘பேரட்’ என்பதை எழுத்துப் பிழையுடன் கூறியுள்ளார். இதற்கு தண்டனையாக,  சிறுமியின் கையை முறுக்கி பல மாக பிரயாக் அடித்துள்ளார். இதில் சிறுமியின் கை எலும்பு முறிந்தது. இதையடுத்து, சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், போலீசாரிடம் புகார் அளித்தனர்.  சிறார் நீதிச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பிரயாக்கை கைது செய்தனர்.

டிச.30- வரை  220.09 கோடி தடுப்பூசிகள் வழங்கல்

புதுதில்லி, டிச.31 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 30 வரை மொத்தம் 220.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்கள் ஆகும். 22.39 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் (பூஸ்டர் தடுப்பூசி) அடங்கும். டிச.30 காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 81,097 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது.  243 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,609 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் 4,41,43,850 பேர்.

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் 4.89 கோடி

புதுதில்லி, டிச.31- 2022-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றங்களில் 165 நீதிபதி கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பில் உள்ளனர். 38 கூடுதல் நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் உட்பட எட்டு நீதிமன்றங்களில் தலா ஒரு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 6-ஆம் தேதி தகவல் அடிப்படையில், உச்சநீதி மன்றத்தில் 69,598 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் 59,57,704 வழக்குகளும்  மாவட்ட துணை நீதி மன்றங்களில் 4,28,21,378 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 28 மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 733 விரைவு சிறப்பு  நீதிமன்றங்கள் மற்றும் 413 பிரத்தியேக போக்சோ நீதிமன்றங்க ளில் 1,24,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.