ஜூன் 12இல் பள்ளிகள் திறப்பை ஒட்டி 3 நாட் களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மதுரைக் கோட்டத்தில் பணிபுரியும் லோகோ பை லட்கள் (ரயில் ஓட்டுநர்) ஸ்மார்ட் வாட்ச் பயன் படுத்த தடை விதித்து அறிவிப்பாணை வெளி யிடப்பட்டுள்ளது. சமீ பத்தில் பணியில் இருந்த ஒரு லோகோ பைலட் ஒரு வர் 110 கிமீ வேகத்தில் ரயில் சென்று கொண்டி ருக்கும் பொழுது தனது ஸ்மார்ட்வாட்சை அடிக்கடி பார்த்துக் கொண் டிருந்ததாக புகார் வந்த நிலையில், தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் இந்த ஆணை யை வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள அனாக் க்ரகடாவ் எரிமலை வெள்ளியன்று ஒரு மணி நேரத்தில் 2 முறை வெடித்த நிலை யில், 3,000 மீட்டர் உய ரத்திற்கு எரிமலை சாம்பல் பரவியதாக தகவல் வெளியாகி யுள்ளது.
“பிரதமர் மோடி இந்தியா வை வல்லரசாக்குவது பற்றிப் பேசுகிறார். ஆனால் 3 ரயில்கள் மோது வதைக் கூட தடுக்க முடி யவில்லை. நம் நாட்டில் ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. ஒடிசா ரயில் விபத்துக்கு யார் பொறுப்பேற்பது?” என மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி கேள்வி எழுப்பி யுள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்று லா சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த புதுமண தம்பதி களான மருத்துவர்கள் விபூஷ்னியா-லோகேஸ்வரன் ஆகி யோர், விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இரு வரும் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெ ண்ணெய்நல் லூர் அருகே 2020இல் சிறுமி ஜெயஸ்ரீயை எரி த்துக்கொன்ற வழக்கில் அதிமுக நிர்வாகிகள் முரு கன் மற்றும் கலியபெரு மாள் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதி த்து விழுப்புரம் மகளிர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.
“வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களால், உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என ஒன்றிய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை; இதனால் வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக் காக நாய்களை இறக்கு மதி செய்ய எவ்வித தடை யும் இல்லை” என, ஒன்றிய அரசு 2016இல் வெளியிட்ட தடை அறி விப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாடு எதிர் கட்சித் தலைவர் பழனிச் சாமியின் சொந்த தொகு தியான எடப்பாடி நக ராட்சியின் 8-வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல், அக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே விவசாய கிணற்றை ஆழப்படுத்த பாறைக்கு வெடி வைத்ததில் கருங்கல் தலையில் விழுந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தார்.
2025 இல் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 125 கோடியை எட்டும் என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்தும் என்று தெரிவித்தார்.
2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் பணியை தேர்தல் ஆணையம் துவக்கியது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறால் ரோப் காரில் சென்ற 250 சுற்றுலா பயணிகள் நடுவழியில் சிக்கித் தவித்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டனர்.
உலகச் செய்திகள்
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்ப தால் கடைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளை வழக்கத்தை விட சீக்கிரமாகவே மூட பாகிஸ்தான் அரசு ஆணையிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் எந்தவிடத் தொடர்புமில்லை என்று வர்த்தகர்கள் மற்றும் அவர்களின் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே கடைகளை மூடுவது பொது மக்களையும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரமல்லா பகுதியில் தனது வெறியாட்டங்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்கிறது. இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதி ஒருவரின் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் நடைபெற்ற ஒரு இரட்டை வெடிகுண்டு வழக்கில் அவருக்கும் தொடர்பிருக்கிறது என்று குற்றம்சாட்டி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அந்நாட்டின் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கே சிறப்புக் கலந்துரையாடலை நடத்தியிருக்கிறார். கவனத்திற்கு உரிய பல்வேறு பிரச்சனைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நிலத்தகராறுகள், அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண அவைத் தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.