states

‘நான் ஜனாதிபதியானால், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது!’

கவுகாத்தி, ஜூலை 14 - “நான் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்ப தை உறுதி செய்வேன்” என குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். அசாம் மாநில எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது: “அசாமின் முக்கியப் பிரச்சனை குடியுரிமையாகும். இந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர அரசு விரும்பி யது. ஆனால் இன்னும் அதை கொண்டு வர முடியவில்லை.  முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை  அமல்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது  வரை இந்த சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. ஏனெனில், இது அவசரமாக கொண்டு வரப்பட்ட முட்டாள்தன மான வரைவு. அரசியலமைப்பிற்கு வெளியில் இருப்பவர் களால் ஆபத்து வரவில்லை. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆபத்து உள்ளது. நாங்கள் அதனை  பாதுகாக்க வேண்டும். நான் ராஷ்டிரபதி பவனில் இருந்தால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்”. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.