ஜெய்ப்பூர், நவ. 25- 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் 199 தொகுதி களுக்கு சனியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி க்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மாலை 5 மணி நில வரப்படி 68 சதவிகித வாக்கு கள் பதிவாகின. ராஜஸ்தா னில் உள்ள 33 மாவட்டங் களில் அதிகபட்சமாக ஜெய் சல்மர் மாவட்டத்தில் 77சத விகித வாக்குகள் பதிவாகி யுள்ளன. ஸ்ரீகங்கா மாவட்டத் தில் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கால மான நிலையில், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.