states

img

ராஜஸ்தானில் 4 மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்

ஜெய்ப்பூர், டிச.23- ராஜஸ்தான் மாநிலத்தில், பரன், கோட்டா, கங்காநகர், கரவ்லி ஆகிய நான்கு மாவட்ட ஊராட்சி களுக்கும், இந்த மாவட்டங்க ளுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றி யங்களுக்கும் தேர்தல் நடைபெற் றது. இதில், 11 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் என 13 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் ஆளும் கட்சியான காங்கிரஸ் 278  வார்டுகளிலும், பாஜக 165 வார்டு களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 14 வார்டுகளிலும், சுயேட்சைகள் 97 வார்டுகளிலும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 11 இடங்களில் வென்று குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 குறிப்பாக, 15 உறுப்பினர்க ளைக் கொண்ட அனூப்கட் ஊராட்சி ஒன்றியத்தில் முக்கிய எதிர்க்கட்சி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறியுள்ளது. இங்கு காங்கிரஸ் 8 இடங்களை வென்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 2 இடங்களைப் பெற்றுள் ளது.  இதேபோல் ராய்சங்நகர், ஸ்ரீவிஜயநகர் பஞ்சாயத்து சமிதி களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக வந்துள்ளது.  பரன், கோட்டா, கங்காநகர், கரவ்லி ஆகிய நான்கு மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தலில், மொத்தமுள்ள 106 வார்டுகளில் காங்கிரஸ் 62 வார்டுகளிலும், பாஜக 36 வார்டுகளிலும் வெற்றி பெற்ற நிலையில், கங்காநகர்  மாவட்ட ஊராட்சியில் இரண்டு வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.