தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி என்பது அதற்கு பிரதிபலனாக நன்கொடைகள் தருபவர்களுக்கு சலுகைகள் கொடுப்பதற்கு இட்டுச்செல்லும். கருப்புப் பணத்தை தடுப்பது என்ற பெயரால் தகவல் அறியும் உரிமையை சிதைப்பதை நியாயப்படுத்த முடியாது, அனைத்து அரசியல் பங்களிப்புகளும் பொது கொள்கைகளை மாற்ற தரப்படுவது இல்லை. தேர்தல் பத்திரங்களை வெளியிடும் வங்கி உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். இதுவரை வெளியிடப்பட்ட தொகை / அதனை பயன்படுத்திய அரசியல் கட்சிகள் பற்றிய விவரங்களை வங்கி கொடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்திற்கு முக்கிய அம்சங்களாகும். இவை ஒருபுறமிருக்க, சில ஊடகங்கள் சிபிஐ(எம்) தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடைகள் பெற்றதாக பொய்ச் செய்திகளை பரப்புகின்றன. அத்தகைய பொய்ச் செய்திகளை விஷமத்தனமாக பரப்பிய ஊடக குழுமங்கள் தமது செய்தியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்.