states

“மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் முகம்தான் வரும்”

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ் கர் மாநில சட்டமன்றத்திற்கு 2  கட்டமாக தேர்தல் நடைபெறு கிறது. முதல் கட்டமாக நக்சல்கள் நட மாட்டமுள்ள 20 தொகுதிகளுக்கு கடந்த  நவம்பர் 7 அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (70 தொகுதிகளுக்கு) நவம்பர் 17 அன்று  நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ராய்ப்பூரில் தேர்தல்  பிரச்சாரத்துக்கு இடையே சத்தீஸ்கர்  முதல்வர் பூபேஷ் பாகேல் செய்தியாளர் களிடம் பேசுகையில்,“மகாதேவ் செய லிக்கு எதிராக மாநில காங்கிரஸ் அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாஜக  ஆளும் மாநிலங்களில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. குற்ற வாளிக்கு எதிராக நாங்கள் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம். லுக்-அவுட் நோட்டீஸுக்கு பிறகு குற்ற வாளியை பிடிப்பது ஒன்றிய அரசின் கடமை என்ற நிலையில், அதனை மறந்து  பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களைக் கூறி வருகிறார். மிகப்பெரிய பொய்யர் என்று தேடினால் மோடியின் முகம்தான் வரும். அப்படி பொய் கூறியும் அவர் களால் எதிர்க்க முடியாதவர்களை அம லாக்கத்துறையை வைத்து முடக்கு வார்” எனக் கூறினார்.