கொச்சி, ஜுலை 30- கேரள அரசு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக கொச்சி இன்போபார்க்கில் நவீன வசதிகளு டன் அதிக இடவசதிகளை தயார் செய் துள்ளது. இன்போபார்க் இரண்டாம் கட்டத்தில், ஜோதிர்மயாவில் ஒன்பதா வது தளம், 1,00,998 சதுர அடியில் மூன்று மாடி காக்னிசன்ட் டெக்னால ஜிஸ் கட்டிடம் மற்றும் திருச்சூர் இன் போபார்க்கில் உள்ள இந்திவரத்தில் இரண்டாவது தளம் ஆகியவை செயல்படத் தொடங்கின. மூன்று இடங்களிலுமாக 1,61,000 சதுர அடியில் 18 நிறுவனங்கள் மூலம் 2,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும். ஜோதிர்மயா 35,000 சதுர அடி யில் 10 அலுவலகங்களைக் கொண்டுள் ளது. ஒன்பதாவது மாடியில், நிறுவ னங்களுக்கு இரண்டு பிரிவுகளாக 1800 முதல் 5600 சதுர அடி வரை ஒதுக் கப்பட்டது. 21 முதல் 95 பேர் வரை வேலை செய்யக்கூடிய அலுவலகங் கள் உள்ளன. மிகப்பெரிய நிறுவனம் ஏர்பே பேமென்ட் சர்வீஸ் ஆகும். இது 5604 சதுர அடியில் 95 ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. திருச்சூர் கொரட்டி வளாகத்தில் உள்ள இந்திவரத்தின் இரண்டாவது தளத்தில் 25,000 சதுர அடியில் தயார் செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிறு வனம் வெப் அண்ட் கிராப்ட் டெக்னா லஜி சொல்யூஷன்ஸ் ஆகும். இது 224 ஊழியர்களுடன் 10,104 சதுர அடி யில் செயல்படத் தொடங்கியது. சப்பிர் டெக்னாலஜிஸ், வின்ஃபால், ரேப்பீல் குளோத் இந்தியா, செபல் மெடி சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்க ளும் செயல்பாட்டைத் தொடங்கின.