states

img

ஆண்டுக்கு 216 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

கொச்சி, மே 21- ஒரு கிலோ கடல் உப்பில் 35 முதல் 575 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது மும்பை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. உப்பைப் பயன்படுத்து வதன் மூலம் ஆண்டுக்கு 216 மைக்ரோ  பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைவதும் கண்டறியப்பட்டது. மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விட்டம் 0.1 முதல் 5 மில்லிமீட்டர் வரை இருக்கும். ஆழ்கடலில் இருந்து உயர மான மலைகள், காற்று, மண் மற்றும்  உணவுச் சங்கிலி என அனைத்துப் பகுதிகளிலும் அவை உள்ளன. இது காற்று மற்றும் நீர் மூலம் எல்லா இடங்களுக்கும் செல்கிறது. மைக்ரோ  பிளாஸ்டிக் துகள்கள் இரத்த நாளங் கள் வழியாக கூட செல்ல முடியும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மும்பை ஐஐடியில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு கிலோ கடற்பாசியில் 35 முதல் 575 துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடல்களில் சேருவதாக மதிப்பீடுகள் காட்டுகின்றன. உலக அளவில் உப்பு உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2022-இல், நாட்டின் உப்பு உற்பத்தி 45 மில்லி யன் மெட்ரிக் டன்னாக இருந்தது. இந்தி யாவில் உப்புக்கான முக்கிய ஆதா ரம் கடல் நீர். பல உப்பளங்கள் சுகாதார மற்ற நிலையில் இயங்குவதாக சிஐஎப்டி விஞ்ஞானி டாக்டர். மார்ட்டின் சேவியர் தெரிவித்துள்ளார்.