states

img

விழிஞ்ஞம் துறைமுகத்தில் முதலாவது கப்பலுக்கு வரவேற்பு

திருவனந்தபுரம், அக்.16 - மூன்றாம் நூற்றாண்டில் சீனாவி லிருந்து கேரளத்தின் விழிஞ்ஞம் வரை வணிகத்திற்காக கப்பல்கள் வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 2023 ஆகஸ்ட் 30 அன்று, ஒரு கப்பல் சீனாவி லிருந்து புறப்பட்டது. ஷென்ஹுவா 15 என்ற அக்கப்பலின் இலக்கு விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் ஆகும். இது  உலகின் மிக முக்கியமான மற்றும் இந்தியாவின் முதல் தாய் துறைமுக மாக இருக்கும். ஷென்ஹுவா 15 இன் வருகை கேர ளத்தின் வளர்ச்சிக்கான நம்பிக்கை மணியின் ஓசையானது. உலக கடல் சரக்கு இயக்கத்தில் இந்தியாவின் முக மாக விளங்கும் விழிஞ்ஞத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பே இக்கப்பல் நங்கூரமிட்டது. இது இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் முன் னெடுப்புகளில் மற்றொரு வரலாறு.  விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்திற்கு முதல் கப்பல் வந்ததன் மூலம், வளர்ச்சித் துறையில் கேரளம் தனது கனவுகளை நனவாக்கியுள்ளது. துறை முக உலகில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் “ஷென்ஹுவா 15” என்ற சரக்கு கப்பலை முதல்வர் பினராயி விஜயன் பச்சைக்கொடி காட்டி வர வேற்றதை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். நீர் வணக்கத்துடன் கப்பல் தளத்துக்கு கொண்டுவரப்பட்டது.

முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் அகமது தேவர்கோ வில், வி.சிவன்குட்டி, கே.ராஜன், ஜி. ஆர்.அனில், ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளீதரன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், சசி தரூர் எம்.பி, எம்.வின்சென்ட் எம்.எல்.ஏ., மேயர் ஆர்யா ராஜேந்திரன், தலைமைச் செயலர் வி.வேணு, அதானி விழிஞ்ஞம் துறை முகம் லிமிடெட் தலைவர் கரண் அதானி, அதானி விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதி காரி ராஜேஷ் ஜா, மக்கள் பிரதிநிதி கள், அதிகாரிகள் வண்ணமயமான பலூன்களை பறக்கவிட்டு   அக் . 15ல் விழாவை தொடங்கி வைத்தனர். வாணவேடிக்கையும், செண்டை மேளமும் அதிர வரலாற்று தருணம் அடையாளப்படுத்தப்பட்டது. பின்னர் கப்பலின் மாதிரி ஒன்று முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஐந்தாயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான அரங்கில் தொடக்க விழா நடைபெற்றது. எம்.வின்சென்ட் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.சுரேஷ்குமார், மதிப்புறு பேராயர் டாக்டர். எம். சூசபாக்யம், குருரத்தினம் ஞானதபஸ்வி, பாளை யம் இமாம் டாக்டர். வி.பி.ஷுஹைப்  மௌலவி, மாநில அரசின் தில்லி  சிறப்புப் பிரதிநிதி கே.வி.தாமஸ்,  துறைமுகத் துறை முதன்மைச் செய லர் கே.எஸ்.ஸ்ரீனிவாஸ், ஆட்சியர் ஜெரோமிக் ஜார்ஜ், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

மகிழ்ச்சியில் கேப்டன்

“ஷென்ஹுவா 15 என்கிற சீனக் கப்பல் தளத்திற்கு வந்தபோது, என் இதயம் துடித்தது. மகிழ்ச்சியான வர லாற்று தருணம். அதை எங்களால் மறக்கவே முடியாது” என்று கேப்டன் துஷார் கூறினார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக மதியம் இரண்டு மணிக்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட கப்பல் 100 மீட்டர் தூரம் நகர்த்தி அருகில் கொண்டு வரப்பட்டது. மாலை  4 மணிக்கு முதல்வர் பினராயி விஜ யன் விழாவை தொடங்கி வைத்தார். கடந்த 12ஆம் தேதி சீனக்கப்பலை ஏழு கடல் மைல் தொலைவில் இருந்து  துறைமுகத்துக்கு கொண்டு வந்த வரும் இவரே. வானிலை சாதகமாக இருக்கும் போது கப்பல் துறை முகத்திற்கு வெளியே எடுக்கப்பட்டு, தளத்துக்கு கொண்டு வரப்படும் என்று துஷார் கூறினார்.  மற்ற துறைமுகங்களில் காற்றே வில்லனாக இருக்கும் போது, விழிஞ்ஞத்தில் பெரிய அலைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது என்றும் அவர் கூறினார்.