states

img

வி.எஸ் அச்சுதானந்தன் வீடு திரும்பினார்

திருவனந்தபுரம், ஜன.25- முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவருமான வி. எஸ்.அச்சுதானந்தன் கோவிட் சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார். ஜனவரி 20 வியாழனன்று அச்சுதானந்தனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரைக் கவனித்துக் கொண்டி ருந்த செவிலியருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வி.எஸ் பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டார். கோவிட்  உறுதி யானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.