ஆலப்புழா, மே 11- சமூக, அரசியல் களத்தில் என்றென் றும் நினைவுகூரப்படும் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் கே.ஆர். கௌரி யம்மா நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலப்புழா மாவட்டக்குழுவின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத் தப்பட்டது.
கே.ஆர். கௌரியம்மாவின் 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆலப்புழாவில் உள்ள தியாகி மண்ட பத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் சி.எஸ்.சுஜாதா, மாவட்டச் செயலா ளர் ஆர்.நாசர் உள்ளிட்ட ஏராளமா னோர் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு எச்.சலாம் எம்எல்ஏ தலைமை வகித்தார். பி.பி.சித்தஞ்சன் எம்எல்ஏ, ஏ.எம்.ஆரிப் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சி.எஸ்.சுஜாதா பேசுகை யில், கௌரியம்மா ஒரு நூற்றாண்டு (102) காலம் தொழிலாளி வர்க்கத்திற் காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னோடி. சுதந்திரம், மதச்சார்பின் மை, சமத்துவம் ஆகியவற்றைக் காக்க ஒட்டுமொத்த நாடும் போராடி வரும் இந்நேரத்தில் கௌரியம்மாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கௌரியம்மாவின் நினைவு வகுப்பு வாதம், சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் என்று கூறினார்.