மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்ட வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை தங்களிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கை முடக்க இந்தியன் வங்கி மேலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாங்கள் அனுமதிக்கும் வரை வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என்று வருமான வரித்துறை இந்தியன் வங்கிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுதொடர்பாக எந்த விளக்கமும் இல்லை. இது அப்பட்டமான அரசியல் தாக்குதல் ஆகும். பாஜக மற்றும் மோடி அரசு தங்களது நிகழ்ச்சி நிரலுக்காக மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. நாங்கள் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம்.