அங்கன்வாடியைத் தொடர்ந்து ரேசன் கடையையும் மூட திட்டம்
வருசநாடு, ஏப்.6- வருசநாடு மலைக்கிராம பகுதி யில் அங்கன்வாடியை தொடர்ந்து ரேசன் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 3 தலைமுறைக்கு மேல் குடி யிருந்து வரும் மக்களை வெளியேற்ற படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலை -மயிலை ஒன்றி யம், மேகமலை உள்ளிட்ட 9 ஊராட்சி களில் 39 கிராமங்களில் வாழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விவ சாயிகள், விவசாயக் கூலிகள் என பல தலைமுறைகளாக வன நிலங்களில் குடியிருந்து விவசாயம் செய்து வரு கின்றனர். 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் பொது நல வழக்கில் ஒரு தரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்து விசாரணையில் 2019 இல் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் சீராய்வு மனு போட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2018-ல் தனி நீதிமன்ற பெஞ்சை ரத்து செய்து ரெகுலர் நீதிமன்ற பெஞ்சில் விசாரணையை துவக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு வழங்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அரசே இணைந்து விவசாயி களுக்கு வன உரிமை சட்டப்படி தீர்வுக்காண மனுதாக்கல் செய்ய வேண்டுமாறும், வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த 39 கிராம வன விவசாயிகள் தாங்கள் பல தலை முறைகளாக உள்ள வன நிலங்களில் விவசாய பணிகளை செய்ய விடாமல் வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். இப்பகுதி விவசாயி களுக்கு தொடர்ந்து விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வன உரிமை சட்டம் 2006 -இன் படி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும் தொடர்ந்து போராடி வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் சதி
மேற்கண்ட வனப்பகுதிகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேகமலை-திருவில்லிபுதூர் புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வனப் பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து மலைக்கிராம பொது மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மலைக்கிராம பொது மக்கள் விவசாயத்தில் ஈடுபட வனத் துறையினர் தடை விதித்தனர். இத னால் மலைக்கிராம பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்தது. மலைக்கிராம பொதுமக்கள் கடந்த சில நாட்களாக மதுரை கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கதி ரேசன், சமுதாய அலுவலர் சலேத்மேரி மற்றும் வனத்துறை அலுவலர்கள், இந்திரா நகர் மஞ்சனூத்து உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சென்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேனி அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்கு மாடி வீடுகளில் குடியேறுமாறு மலைக் கிராம பொதுமக்களை வற்புறுத்தி வருகின்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி புதிய வீடு களுக்கு செல்ல மலை கிராம பொது மக்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மலை கிராம பொதுமக்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேற தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் மாவட்ட நிர்வாகத்தினர் தற்போது மாற்று முறைகளை கை யாள தொடங்கியுள்ளனர். முதற்கட்ட மாக வண்டியூரில் உள்ள அங்கன்வாடி மையத்தை மூடி ,அதில் பணியாற்றிய ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். மேகமலை, தும்முக்குண்டு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட காந்தி கிராமம், ஐந்தரைப்புலி வண்டியூர், அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட 14 மலைக்கிராமங்களில் ரேசன் கடை கள், அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளி களை மூட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல காந்திகிராமம், முத்து நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிர்வாகத்தினர் மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவு களை பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே விவசாயத்தில் ஈடுபட முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மலைக்கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் மற்றொரு பேரிடியாக விழுந்துள்ளது. (ந.நி)