தேஜஸ்வி யாதவ் பேச்சு
கோழிக்கோடு, மே 29- நாடு சந்தித்துவரும் சவால்களை எதிர்கொள்ள சோசலிஸ்டுகளும் கம்யூ னிஸ்டுகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும், கேரள முதல்வர் பின ராயி விஜயன் நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளார் எனவும் ஆர்ஜேடி தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறினார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர குமாரின் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதி யாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி யில் கலந்துகொண்டு தேஜஸ்வி உரை யாற்றினார். அப்போது அவர் மேலும் கூறு கையில், “இடதுசாரிகள், ஜனதா தளம் ஆகிய இரு இயக்கங்களும் அரசியல், சித்தாந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஏழைகளை மீட்க முன்வரவேண்டும். சமூக- பொருளாதார சமத்துவமின்மை யைக் குறைப்பதற்கான பொதுவான இலக்கை நோக்கி சோசலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் செயல்படுகிறோம். தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கும், பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட நாட்டின் அடிப்படைப் பிரச்சனை களைத் தீர்க்கவும் ஒருங்கிணைந்த போராட்டங்கள் உதவும். மதவாத அடிப் படையில் நாட்டை பிளவுபடுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. வகுப்புவாதத்தையும் மதப் பிரிவினையையும் தூண்ட வெறுப்பை பரப்புகின்றனர். கேரளா உட்பட அரசியல் சாசன அமைப்புகள் தாக்கப்படுகின்றன. ஏழைகளுக்கான அரசியலை செயல் படுத்துவதில் முதல்வர் பினராயி விஜயன் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்” என்றார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் முத்தி ரையுடன் கூடிய நினைவுப் பரிசையும், பீகாரின் பாரம்பரியத்தில் நெய்த ஆடையை யும் முதல்வரிடம் தேஜஸ்வி யாதவ் வழங்கினார்.