states

குழந்தைகள் தினத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான கடும் எச்சரிக்கை

திருவனந்தபுரம், நவ.14- ஆலுவாவில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அறி வித்துள்ள தீர்ப்பு இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விடுக்கப் பட்டுள்ள கடும் எச்சரிக்கை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சமூகத்தையே அதிரவைக்கும் கொடூர மான செயலுக்கு குழந்தை பலியானது என்றும், குழந்தைகள் தினத்தன்று வந்துள்ள இந்த தீர்ப்பு, குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு வலுவான எச்சரிக்கை என்றும் முத லமைச்சர் கூறினார். முழுமையான விசார ணையின் மூலம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்ததற்காக விசாரணைக் குழுவையும், அரசுத் தரப்பையும் முதல்வர் பாராட்டினார். ஆலுவாவில் கொடூரமாக கொல்லப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அனை த்து வகையான உதவிகளையும் பாது காப்பையும் தர அரசாங்கம் உறுதி யளித்துள்ளது. அவர்களின் இழப்பை எத னாலும் ஈடுசெய்ய முடியாது. எனினும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி உறுதி செய்யப்பட்டது. நாகரீக சமுதாயத்தில் குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறை யும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படிப் பட்டவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய மனிதாபிமானமற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நீதிமன்றத் தீர்ப்பு ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. இது போன்ற குற்றவாளிகளை தனிமைப்படுத்த ஒட்டுமொத்த சமுதாயமும் தயாராக வேண்டும் என்றார் முதல்வர்.