முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மீது சுமத்தப் பட்ட பொய்க் கதைகள் குறித்த விசா ரணையில், கேள்விகளுக்கு பதில ளிக்க முடியாமல், சொப்னா சுரேஷ் திணறினார். சிபிஎம் தளிப்பரம்பு பகுதி செயலாளர் கே.சந்தோஷின் புகாரின் பேரில், 2 மணி நேரம் நீடித்த விசாரணையில் எந்த ஆதா ரமும் கிடைக்கவில்லை.
முதல்வர் மற்றும் அவரது குடும் பத்தினர் மீதான அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் கேரள தங்க கடத்தில் வழக்கில் சிக்கிய சொப்னா சுரேஷ் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற விஜேஷ் பிள்ளை என்பவர் மூலம் எம்.வி.கோவிந்தன் ரூ.30 கோடி தரு வதாக உறுதியளித்தார் என சொப்னா சுரேஷ் குற்றச்சாட்டினார். இதற்கு தயாராக இல்லை என்றால் ஒழித்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டு செய்தியாக வந்ததை யடுத்து, சதிக்கு திட்டமிடல், போலி யான சான்று தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி சந்தோஷ் காவல் துறையில் புகார் அளித்தார்.
இதன் மீதான விசாரணைக்காக கண்ணூர் குற்றப்பிரிவு அலுவல கத்தில் புதன்கிழமை ஆஜரான சொப்னாவால் எந்த ஆதாரத்தை யும் ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. விசாரணை அதிகா ரிகள் ஏசிபி டி.கே.ரத்னகுமார், பைய னூர் டிஒய்எஸ்பி கே.இ.பிரேமச் சந்திரன், தளிப்பரம்பு சிஐ தினே சன், ஸ்ரீகாந்தபுரம் எஸ்ஐ கதீஜா ஆகியோர் விசாரணை நடத்தினர். தேவைப்பட்டால் மீண்டும் அழைக் கப்படுவார் என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. கண்ணூருக்கு வருவதால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எர்ணாகுளத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் சொப்னா தாக்கல் செய்த மனு வை உயர்நீதிமன்றம் நிராகரித்த தைத் தொடர்ந்து இவ்விசாரணை கண்ணூரில் நடந்தது.
விசாரணைக்கு பின்னர் ஊட கங்களுக்கு பதிலளித்த சொப்னா, தனக்கு எம்.வி.கோவிந்தனை தெரி யாது என்றும், விஜேஷ் பிள்ளை கூறியது வெளியாகிவிட்டதாகவும், இந்த வழக்கு நாடகத்தனமாக விசா ரிக்கப்படுவதாகவும் கூறினார். சொப்னாவின் குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்ட குற்றச்சாட்டு என்று விஜேஷ் பிள்ளை ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்.