states

img

சிபிஎம் குறித்து அவதூறு - மன்னிப்பு கோரிய மலையாள மனோரமா!

திருவனந்தபுரம் ,மே.27- சிபிஎம் குறித்து அவதூறு செய்தி பரப்பியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மன்னிப்பு தவறான செய்தி பதிவிட்டதாக மலையாள மனோரமா மன்னிப்பு கோரியுள்ளது.
மேகா இஞ்சினியரிங் எனும் நிறுவனத்திடமிருந்து தேர்தல் பத்திரம் மூலம் சிபிஎம் ரூ.25 லட்சம் நன்கொடை பெற்றது என மலையாள மனோரமா அவதூறு செய்தி பரப்பியுள்ளதற்கு மன்னிப்பு கோரவில்லை எனில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என சிபிஎம் எச்சரிக்கை விடுத்திருந்தது 
இந்நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறப்பட்டது என தவறாகப் பதிவிட்டதாக மலையாள மனோரமா மன்னிப்பு கோரியுள்ளது. 
மேலும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஒரே கட்சி சிபிஎம் என்பது குறிப்பிடத்தக்கது