கொச்சி, ஆக.10- மலையாளத்திலும் தமிழிலும் சூப்பர்ஹிட் திரைப்படங்களின் இயக்கு நர் சித்திக் (68) கொச்சியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாத மாக சிகிச்சை பெற்று வந்தார். நிமோனியா காரணமாக அவரது உடல் நிலை மோசமடைந்தது. செவ்வா யன்று (ஆக.8) இரவு உயிரிழந்தார். கடவந்திரா ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் பின்னர் மணக்கடவில் உள்ள அவரது வீட்டிலும் பொது மக்கள் பார்வைக்கு அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. 6 மணிக்கு எர்ணாகுளம் மத்திய ஜும்ஆ மசூதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மம்முட்டி தனது மகனும் நடிகருமான துல்கர் சல்மானுடன் கட வந்திரா உள்விளையாட்டு அரங்கிற்கு வந்து சித்திக்கிற்கு அஞ்சலி செலுத்தி னார். ஜெயராம், பாசில், ஃபஹத் பாசில், டொவினோ தாமஸ், ஹரிஸ்ரீ அசோகன், ஜனார்த்தனன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சித்திக்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஹிட்லர்’, பிரண்ட்ஸ், காட்பாதர், சாஹு மிராண்டா, க்ரோனிக் பேச்சிலர்’, ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், இன் ஹரிஹர் நகர், போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் சித்திக். தமிழில் விஜய், சூர்யா, தேவயானி உள்ளிட்டோர் நடித்த பிரண்ட்ஸ் இவர் தயாரித்து இயக்கிய படமாகும். மோகன்லால், அர்பாஸ் கான் மற்றும் பலர் நடித்த ‘பிக் பிரதர்’ தான் அவர் கடைசியாக வழங்கிய திரைப்படம். திரைப்பட தயாரிப்பாளரான இவ ருக்கு சஜிதா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மலை யாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் திரைப் படத்துறையில் பங்களித்தார். சித்திக் கின் இழப்பு மலையாளத் திரை யுலகிற்கும், மலையாளிகள் அனை வருக்கும் ஈடுசெய்ய முடியாதது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.