states

img

நபிகள் நாயகத்தை அவதூறு செய்த பாஜக மதச்சார்பற்ற இந்தியாவுக்கு சங் பரிவாரத்தால் வெட்கம்

திருவனந்தபுரம், ஜுன் 8- மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று அனைவராலும் போற்றப்படும் நமது நாட்டை, உலகத்தின் முன் வெட்கப்படும் நிலைக்கு சங்  பரிவார் சக்திகள் கொண்டு வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.  அதில் சமீபத்திய அத்தியாயம், கடந்த நாட்க ளில் பாஜக செய்தித் தொடர்பாளர்களால் நபிகள் நாயகத்திற்கு எதிரான இன துஷ்பிர யோகம் செய்யப்பட்ட கருத்துக்கள் என்றும்  முதல்வர் கூறினார். முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்தும் இந்துத்துவா வகுப்புவாத அரசியல், நாட்டின்  சமூகப் பாதுகாப்பை மட்டுமன்றி பொருளா தார ஸ்திரத்தன்மையையும் அழித்து வரு கிறது. பல லட்சக்கணக்கான இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் மற்றும் நமது பொரு ளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்க ளிப்பை வழங்கும் பல இஸ்லாமிய நாடுகள்,  பாஜக மற்றும் சங்பரிவாரத்தின் வெறுப்பு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வரு கின்றன. இவை அனைத்தும் இந்தியாவுடன் மிகவும் நட்புறவு கொண்ட நாடுகள். நபிகள் நாயகத்தை துஷ்பிரயோகம் செய்  வது சங்பரிவார் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி.  ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விருப்  பப்படி மதங்களை நம்புவதற்கான உரிமை யை வழங்கும் நமது அரசியலமைப்பை அவர்கள் முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். மற்றொரு மதத்தின் நம்பிக்கை மற்றும்  கலாச்சாரத்தை அவமதிக்கவோ அல்லது மறுக்கவோ அரசமைப்பு சாசனம் யாருக்கும் உரிமை வழங்கவில்லை. நமது நாட்டின் மகத்தான மதச்சார்பற்ற பாரம்பரியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அடாவடித்தனமான பிரச்சாரங்களை தடுத்து, தண்டிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வகுப்புவாத சக்திகளுக்கு பொது மக்களிடம் இருந்து ஒன்றுபட்ட எதிர்ப்பு எழ வேண்டும். இது நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமானது என பினராயி விஜயன் தெரி வித்தார்.