திருவனந்தபுரம், டிச. 1- அறிவியல் மற்றும் வரலாற்று உணர்வை அழிக்கும் சங்பரிவார் நிகழ்ச்சி நிரலை எதிர்த்து தோற்கடிக்க வேண்டியது ஆய்வாளர்களின் கடமை எனவும், ஆய்வுகள் புதுப்பித்ததாக வும், சமூகப் பொறுப்புடனும் இருக்க வேண்டும் எனவும் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் சுட்டிக்காட்டி னார். அனைத்து கேரள ஆராய்ச்சி அறி ஞர்கள் சங்கத்தின் (ஏகேஆர்எஸ்ஏ) கேரள பல்கலைக்கழகக் கிளையின் மாநாட்டை அவர் தொடங்கி வைத்து மேலும் பேசியதாவது: சங்பரிவார்கள் அதிகம் பயப்படு வது உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தான். கேரளாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறு வனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நிகழ்ச்சி நிரலை ஆளுநர் மாளிகைகள் மூலம் செயல்படுத்த ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. கேரளாவின் விரிவான முன்னேற்றம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை தடுக்கும் குறுகிய நோக்கத்துடன் சங்பரிவாரும் வலது சாரி சக்திகளும் செயல்படுகின்றன. பல்கலைக்கழகங்களின் கல்வி சுதந்தி ரத்தையும் சுயாட்சியையும் அழிக்க முயற்சிக்கின்றன.
தீவிர வலதுசாரிகளால் உருவாக்கப் படும் உண்மைக்கு மாறான உரை யாடல்கள் சமூகத்தை தவறான திசை யில் இட்டுச் செல்கின்றன. சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். சமூக முன்னேற் றத்திற்கு சரியான அறிவியல் உணர் வும், வரலாற்று உணர்வும், ஆழமான அறிவும் அவசியம் என்றார். ஆராய்ச்சித் துறையில் அர சமைப்பு வழங்கியுள்ள இடஒதுக் கீட்டை அமல்படுத்தவேண்டும். ஆளு நரின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து ஜனநாயகப் போராட்டத்தை வலுப் படுத்த வேண்டும். பல்கலைக்கழ கத்தில் பாலின சமத்துவத்தை கடைப் பிடிக்க வேண்டும், உயர்கல்வி காவி மயமாக்கல் மற்றும் வணிகமய மாக்கலைத் தடுத்திட வேண்டும், ஒன்றிய அரசு மற்றும் யுஜிசி ரத்து செய்த ஆராய்ச்சி உதவித்தொகையை மீட்டெடுக்க வேண்டும் என்பது உள்ளி ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகளாக கோஷ் கே.எஸ் (கன்வீனர்), அபிராமி மற்றும் நவீன் (இணை கன்வீனர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏகேஆர் எஸ்ஏ மாநில கன்வீனர் ஜீவன், எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் கோகுல் கோபி நாத், ஏகேஆர்எஸ்ஏ கேரளா பல்கலைக் கழக வளாக கன்வீனர் நஜீப் எஸ், ஆரா ய்ச்சியாளர் சங்க தலைவர் ஜிபின் பிரான்சிஸ் உள்ளட்டோர் பேசினர்.