states

img

மரம் ஏறும் தொழிலாளி மகன் என்பதில் பெருமையே... கே.சுதாகரனுக்கு பினராயி விஜயன் பதில்...

திருவனந்தபுரம்:
தான் ஒரு மரம் ஏறும் தொழிலாளியின் மகன் என்பதில் பெருமைப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கேபிசிசி செயல் தலைவர் கே.சுதாகரனுக்கு பதிலளித்துள்ளார்.நான் பிறந்தது விவசாய குடும்பத்தில்தான். மூத்த சகோதரரும் ஒரு மரம்ஏறும் தொழிலாளிதான். இரண்டாவது சகோதரரும் அதே தொழில்தான் செய்தார். இதுவே எனது குடும்பப் பின்னணி. இது எந்த வகையிலும் அவமானகரமானது என்று நான் நினைக்கவில்லை. இதை பெருமை மிக்கதாகவே நான் கருதுகிறேன். என்னை அறிந்தவர்களுக்கு நான் எத்தகைய வாழ்க்கை வாழ்கிறேன் என்பது தெரியும் என்றார்.சுதாகரன் கூறியது என்ன நோக்கத்துக்காக என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறிய பினராயி, ரமேஷ் சென்னித்தலா ஏன் சுதாகரனின் கூற்றை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

;