states

img

‘பாரத் மாதா கி ஜே’ முழக்கத்தை சங்பரிவார் கைவிடுமா? - கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘ஜெய்ஹிந்த்’ ஆகிய முழக்கங்களை முதன்முதலில் எழுப்பியது இரு இஸ்லாமியர்கள் தான், சங்பரிவார் அமைப்பு இந்த முழக்கங்களைக் கைவிடுமா என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கேரள மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பினராயி விஜயன், இஸ்லாமிய ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்திற்கு முக்கிய பங்கு ஆற்றியதாக தெரிவித்தார். சங்பரிவார் தலைவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தை எழுப்புமாறு 
அஜிமுல்லா கான் என்ற இஸ்லாமியர்தான் 'பாரத் மாதா கி ஜே' கோஷத்தை முதலில் எழுப்பினார்; அபித் ஹசன் என்ற இஸ்லாமியர்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்; சங்பரிவார் அமைப்பு இந்த முழக்கங்களைக் கைவிடுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ. இந்தியப் படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல தாரா ஷிகோ உதவியாக இருந்தவர்; இஸ்லாமியர்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இந்த வரலாறுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பினராயி விஜயன் பேசினார்.