states

img

ஒன்றரை வயது குழந்தைக்கு இதயம் திறந்து அறுவை சிகிச்சை

திருவனந்தபுரம், ஜுன் 8- எஸ்ஏடி மருத்துவமனையில் பிறவி இதயக் குறைபாட்டுடன் (சயனோடிக் ஹார்ட் டிஸீஸ்) பிறந்து, ஏழு கிலோ எடையுள்ள ஒன்றரை வயதுக் குழந்தைக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. எஸ்ஏடி யில் 2021 செப்டம்பரில் தொடங்கி இதுவரை, சுமார் 100 திறந்த இதய அறுவை சிகிச்சைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. சயனோடிக் ஹார்ட் டிஃபெக்டிற்கான செயல்முறையை எஸ்ஏடி மருத்துவமனை செய்வது இதுவே முதல் முறை. கேரளாவில் மிக சில மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மருத்துவமனைக்குச் சென்று, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவ குழுவினர் அனைவரையும் பாராட்டினார். குழந்தையை அமைச்சர் பார்வையிட்டு பெற்றோரிடம் உரையாடினார்.

கொல்லம் உரியாக்கோவிலை சேர்ந்த ராகுல் - அஸ்வதி தம்பதியரின் இரட்டையரில் ஒரு குழந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கர்ப்ப காலத்தில் இதயக் குறைபாடு கண்டறியப்பட்டது. பிரசவத்திற்குப் பிறகு குழந்தைக்கு எஸ்ஏடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மே 31ஆம் தேதி அறு வை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தை முழுமையாக குணமடைந்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர். வினு, மற்றும் மருத்துவர்கள் நிவின், சுரேஷ், மயக்க மருந்து துறை நிபுணர்கள் அருண், டிங்கிள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். கேரள அரசு மருத்துவமனையான ஸ்ரீ அவிட்டம்  திருநாள் (எஸ்ஏடி) மருத்துவமனையில் குழந்தை களுக்காக தனி இதய அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் கேத் லேப் உள்ளது. கேத்லே மூலம் 450க்கும் மேற்பட்ட விசைத் துளை (லேப்ராஸ்கோப்) அறுவை சிகிச்சைகள்  ஏற்கனவே செய்யப் பட்டுள்ளன.  குழந்தைகள் இருதயவியல் பிரிவில் மருத்துவர்கள் லட்சுமி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையில், பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான இதய  நோய்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் பிடிஏ  ஸ்டென்டிங், கடந்த ஆறு மாதங்களில் 10 பிறந்த குழந்தை களுக்கு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.